காங்கேசன்துறை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
காங்கேசன்துறை தொடருந்து நிலையம் (Kankesanthurai railway station) இலங்கையின் வடக்கே காங்கேசன்துறை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. வடக்குப் பாதையில் உள்ள கடைசிப் தொடருந்து நிலையம் இதுவாகும். ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று காங்கேசன்துறை தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. வடக்குப் பாதையின் யாழ்ப்பாணத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையேயான போக்குவரத்து 2015 சனவரி 2 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2]
விரைவான உண்மைகள் காங்கேசன்துறை, பொது தகவல்கள் ...
காங்கேசன்துறை | |
---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | காங்கேசன்துறை இலங்கை |
ஆள்கூறுகள் | 9°48′52.10″N 80°02′54.10″E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகின்றது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 2 சனவரி 2015 |
மின்சாரமயம் | இல்லை |
மூடு
|