கொடிகாமம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கொடிகாமம் தொடருந்து நிலையம் (Kodikamam railway station) இலங்கையின் வடக்கே கொடிகாமம் நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று கொடிகாமம் தொடருந்து நிலையமும் 1990 முதல் 2015 வரை இயங்காமல் இருந்து வந்தது. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் கொடிகாமம் ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[1][2] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[3][4]
விரைவான உண்மைகள் கொடிகாமம், பொது தகவல்கள் ...
கொடிகாமம் | |
---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | கொடிகாமம் இலங்கை |
ஆள்கூறுகள் | 9°47′06.00″N 80°02′07.00″E |
உரிமம் | இலங்கை தொடருந்து போக்குவரத்து |
தடங்கள் | வடக்குப் பாதை |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
வரலாறு | |
மறுநிர்மாணம் | 13 அக்டோபர் 2014 |
மின்சாரமயம் | இல்லை |
மூடு
|