தேசிய நெடுஞ்சாலை 44 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
தேசிய நெடுஞ்சாலை 44, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் மிக நீண்ட வடக்கு-தெற்கு இணைப்புச் சாலை ஆகும். இது ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியாக செல்கிறது.[1] இந்த நெடுஞ்சாலையானது மத்திய பொது வேலைகள் திணைக்களத்தால் பராமரிக்கப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலை முன்பிருந்த ஏழு வெவ்வேறு நெடுஞ்சாலைகளை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்ததன் மூலம் உருவாக்கப்பட்டது. சம்மு காசுமீரின் ஸ்ரீநகரில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 1ஏ, பஞ்சாப்-அரியானாவில் இருந்து டெல்லி வரையான தேசிய நெடுஞ்சாலை 1, டெல்லியில் இருந்து ஆக்ரா வரையான தேசிய நெடுஞ்சாலை 2இன் பகுதி, ஆக்ரா-பம்பாய் நெடுஞ்சாலை என அறியப்படும் தேசிய நெடுஞ்சாலை 3இன் ஆக்ரா முதல் குவாலியர் வரையான பகுதி, முன்னைய தேசிய நெடுஞ்சாலை 75, ஜான்சி வரையான முன்னைய தேசிய நெடுஞ்சாலை 26 மற்றும் நாக்பூர், ஆதிலாபாத், நிர்மல், ஐதராபாத், கர்நூல், அனந்தபூர், சிக்கபள்ளாபூர், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓமலூர் , சேலம், நாமக்கல், வேலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஊடாகக் கன்னியாகுமரி வரை செல்லும் முன்னைய தேசிய நெடுஞ்சாலை 7 என்பவற்றை இணைத்து உருவாக்கப்பட்டது.