தென்னிந்திய வரலாறு
From Wikipedia, the free encyclopedia
தென்னிந்திய வரலாறு (History of South India) இரும்புக் காலத்திலிருந்து (பொ.ஊ.மு. 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது.
The lead section of this article may need to be rewritten. (சூன் 2020) |
களப்பிரர்கள் (பொ.ஊ. 250–600) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது.
தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.
பொ.ஊ. 16ம் நூற்றாண்டில், வணிக நோக்கில் தென்னிந்தியாவில் காலூன்றிய ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனிகள், தென்னிந்திய மன்னர்களின் ஒற்றுமையின்மைக் கண்டு, தென்னிந்தியாவைக் கைப்பற்ற தங்களுக்குள் போட்டியிட்டனர். இப்போட்டியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி சென்னை மாகாணத்தை நிறுவினர். பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட, தென்னிந்திய சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்திக் கொண்டு தங்கள் பகுதிகளை ஆண்டனர். தென்னிந்தியாவின் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆண்டனர்.
1947ல் இந்தியப் பிரிவினைக்கு பின்னர், தென்னிந்தியாவில் இருந்த ஐதராபாத் இராச்சியம், மைசூர் அரசு, திருவிதாங்கூர், கொச்சி இராச்சியம், புதுக்கோட்டை சமஸ்தானம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி, தென்னிந்தியாவை, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. 2014ல் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு, 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது.