![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Flag_of_Kingdom_of_Travancore.svg/langta-640px-Flag_of_Kingdom_of_Travancore.svg.png&w=640&q=50)
திருவிதாங்கூர்
கேரளாவிலிருந்த மன்னர் குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
திருவிதாங்கூர் இராச்சியம் (Kingdom of Thiruvithamkoor அல்லது Kingdom of Travancore), இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு மன்னர் அரசு ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. இதன் முதல் மன்னர் கார்த்திகை திருநாள் ராமவர்மன். இவர் காலத்திலிருந்து வேணாடு திருவிதாங்கூர் என்ற பெயரில் செயல்பட தொடங்கியது வேணாட்டு மன்னன் பால மார்த்தாண்ட வர்மா காலத்தில் தலைநகர் கல்குளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. பின்பு வந்த திருவிதாங்கூர் மன்னர்களும் திருவனந்தபுரத்தையே தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். வெள்ளி நிறத்தில் வலம்புரிச் சங்கு பொறித்த செந்நிறக் கொடியைக் கொண்டு ஆட்சி நடத்தப்பட்டது.
திருவாங்கூர் இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1729–1949 | |||||||||
நாட்டுப்பண்: வஞ்சி மங்களம் | |||||||||
![]() இந்தியாவில் திருவிதாங்கூர் இராச்சியம் | |||||||||
நிலை | பிரித்தானிய இந்தியாவின் மன்னர் அரசு | ||||||||
தலைநகரம் | பத்மனாபபுரம் (1729–1795) திருவனந்தபுரம் (1795–1949) | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலையாளம், தமிழ் | ||||||||
சமயம் | பெரும்பான்மை: இந்து சமயம் (அதிகாரபூர்வம்) சிறுபான்மை: சாந்த தோமையர் கிறித்தவம் | ||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||
மகாராஜா | |||||||||
• 1729–1758 (முதல்) | பால மார்த்தாண்ட வர்மர் | ||||||||
• 1829–1846 (உச்சம்) | சுவாதித் திருநாள் | ||||||||
• 1931–1949 (இறுதி) | சித்திரைத் திருநாள் பலராம வர்மன் | ||||||||
Resident | |||||||||
• 1788–1800 (முதல்) | ஜார்ஜ் போனி | ||||||||
• 1800–1810 | கொலின் மெக்கோலே | ||||||||
• 1840–1860 (உச்சம்) | வில்லியம் கலென் | ||||||||
• 1947 (இறுதி) | கொசுமோ கிராண்ட் நிவென் எட்வர்ட்சு | ||||||||
வரலாற்று சகாப்தம் | பேரரசுவாதம் | ||||||||
• தொடக்கம் | 1729 | ||||||||
• பிரித்தானிய இந்திய அரசின் கீழ் | 1795 | ||||||||
• விடுதலை பெற்ற இந்தியாவின் கீழ் | 1947 | ||||||||
• முடிவு | 1949 | ||||||||
பரப்பு | |||||||||
1941 | 19,844 km2 (7,662 sq mi) | ||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1941 | 6070018 | ||||||||
நாணயம் | திருவிதாங்கூர் ரூபாய் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
1949 சூலை 1 இல், திருவிதாங்கூர், மலையாளம் பேசும் இன்னொரு அரசாக இருந்த கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி ஆனது. பின்னர் இது மதராஸ் மாநிலத்தின், மலபார் மாவட்டம் ஆக்கப்பட்டது. இச் சமஸ்தானத்தின் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன் ஆவார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/21/Madras_Prov_1859.gif/320px-Madras_Prov_1859.gif)