சென் புத்தமதம்
From Wikipedia, the free encyclopedia
சென் புத்தமதம் (ஆங்கிலம்: Zen; சீனம்: 禪; பின்யின்: Chán) மகாயான புத்தமதத்தின் ஒரு பிரிவு ஆகும். சீன அரசு மரபுகளில் ஒன்றான தாங் அரசமரபு (சூன் 18, 618 – சூன் 4, 907) காலத்தில் சான் புத்தமதம் என்ற பெயரில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சீன சமயத்தின் தத்துவக்கோட்பாடான தாவோயிசத்தால் வலிமையாகப் பாதிக்கப்பட்டு சீன புத்தமதத்தின் ஒரு தனிப்பிரிவாகச் சான் புத்தமதம் வளர்ந்தது. பின்னர் இப்பிரிவு சீனாவிலிருந்து தெற்கு வியட்நாம், வடகிழக்கு கொரியா, கிழக்கு சப்பான் போன்ற பகுதிகளுக்குப் பரவியது. சப்பானில் இப்பிரிவு சப்பானிய சென் என்று அழைக்கப்படுகிறது[1]. சப்பானியர்களின் அன்றாட வாழ்வும் கலை, இலக்கியம், ஓவியம், கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் சென் புத்தமதத்தின் பாதிப்பு உள்ளது.
நாடுகள் |
இந்தியா • இலங்கை • சீனா • சப்பான் மியான்மர் கம்போடியா ஆங்காங் தைவான் கொரியா • வியட்நாம் தாய்வான் • மங்கோலியா திபேத்து • பூட்டான் • நேபாளம் |
கொள்கை |
போதிசத்வர் • Upāya Samādhi • Prajñā Śunyatā • Trikāya |
மகாயான சூத்திரங்கள் |
Prajñāpāramitā Sūtras தாமரை சூத்திரம் நிர்வாண சூத்திரம் சுவர்ணபிரபாச சூத்திரம் தசபூமிக சூத்திரம் Saṃdhinirmocana Sūtra Avataṃsaka Sūtra ததாகதகர்ப தத்துவம் Laṅkāvatāra Sūtra |
மகாயானப் பிரிவுகள் |
மத்தியமிகம் யோகசாரம் சௌத்திராந்திக யோகசாரம் சுகவதி Esoteric Buddhism தூய நிலம் • சென் • தியாந்தாய் • நிச்சிரென் |
வரலாறு |
பட்டுப் பாதை • நாகார்ஜுனர் போதி தருமன்அசங்கர் • வசுபந்து திக்நாகர் தர்மகீர்த்தி |
Portal |
சென் புத்தமதம் அனுபவ ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. தியானம், அறம் என்பவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவ அறிவை முதன்மைப்படுத்துவதால், கோட்பாட்டு அறிவுக்கு இது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.[2][3]. இம்மதம் சீனாவில் உள்ள சவோலின் கோயிலில், புத்தமதத் துறவியாக மாறிய தென்னிந்தியாவைச் சேர்ந்த பல்லவ இளவரசன் போதி தருமன் என்பவரால் தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. இவர், சொற்களில் தங்கியிராத, மத நூல்களுக்கு அப்பாற்பட்ட அறிவு பற்றிக் கற்பிப்பதற்காகச் சீனாவுக்கு வந்ததாக அறியப்படுகின்றது.
சென் ஒரு தனியான புத்தமதப் பிரிவாக உருவானது குறித்து முதன்முதலாக கிபி 7ஆம் நூற்றாண்டில் பதிவுகள் காணப்படுகின்றன. மகாயான புத்தமதத்தில் காணப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளின் கலப்பினாலேயே சென் புத்தமதம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.