மியான்மரில் பெளத்தம்
From Wikipedia, the free encyclopedia
மியான்மரில் பின்பற்றப்படும் பெளத்தமதத்தில் மிக முதன்மையானதாக இருப்பது தேரவாத பௌத்தம் என்ற பாரம்பரிய முறையாகும்.[1][2] மியான்மர் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களில் 89% பேர் இந்த மரபு வழியை தான் பின்பற்றுகின்றனர்.[1][3] மியான்மர் ஒரு மிகச்சிறந்த புத்த ஆன்மீக நாடு ஏனென்றால் அங்கு அதிக விகிதாச்சாரத்தில் புத்தமத துறவிகளும் மற்றும் ஆன்மீகத்திற்காக அவர்கள் செலவிடும் தொகையும் மிக அதிகமாகும்.[4] மேலும் பர்மிய சமுதாயத்தில் ஷான், ராகினி, மோன், கரேன், ஸோ மற்றும் சீனர்கள் ஆகியோர் புத்த சமயத்தோடு நன்கு இணைந்திருக்கிறார்கள் . மியான்மரில் பல இனக்குழுக்களில், சங்ஹா என்றழைக்கப்படும் சங்ஸ், பாமர் மற்றும் ஷான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பர்மிய பாரம்பரியத்தோடு இணைந்து வாழகிறார்கள்.
மியான்மரில் உள்ள பௌத்தர்களின் தினசரிப் பணிகளைப் பொறுத்தவரையில் இரண்டு பிரபலமான நடைமுறைகள் உள்ளன: தகுதி -உருவாக்குதல் மற்றும் விபாசனம். வெஸ்சா பாதை சிறிதளவே பிரபலமானது; இது ஆச்சர்யங்களை எதிர்பார்க்கும் புத்த பிட்சுகளுக்கு ஏதுவான ஒரு இணைந்த வடிவம் ஆகும்.[5]
தகுதி-உருவாக்குதல் பர்மிய பெளத்தர்களால் மேற்கொள்ளப்படும் பொதுவான வழிகளாகும். இதன் நோக்கம் விருப்பமான அல்லது நல்ல சாதகமான மறுபிறப்பை பின்வரும் வழிகளில் அடைவது. ஐந்து நல் வழிகளை கடைபிடிப்பது, நல்லொழுக்கங்கள் மற்றும் நல்ல செயல்களால் (தானா) நல்ல குணநலன்களைக் கொண்டுவருவதும் இந்த பாதையில் அடங்கும்.
விபாசனம் 1900 களின் தொடக்கத்தில் பர்மிய பெளத்தர்களிடையே பிரபலமான பாதையாகும், ஆழ்ந்த தியானத்தின் மூலம் நல்ல ஞானத்தை அடைய வழிவகுக்கும் என நம்பப்படும் ஒரு வடிவமாகும்.
வெஸ்சா பாதை ஆச்சர்யங்களும் இரகசியங்களும் நிறைந்த இயல்பான நடைமுறைகள் இல்லாத (மந்திரங்கள் ஜெபிப்பது, சமாதா மற்றும் இரசவாதம் இன்னும் பிற) பாதையாகும். எதிர்கால புத்தரின் மைத்ரேயா (அறிமத்தேயா) தோற்றத்திற்கு காத்திருக்கும் ஒரு முற்றிலும்-அழியாத மற்றும் இயற்கைக்கு மாறான வாழ்க்கை வாழ வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.[6]