நாகார்ச்சுனர்
From Wikipedia, the free encyclopedia
நாகார்ச்சுனர் (Nāgārjuna, தெலுங்கு: నాగార్జున, அண். கிபி 150 – 250) மகாயான பௌத்தப் சமயப் பிரிவில் மாத்யமக பள்ளியை நிறுவிய இந்திய மெய்யியலாளர் ஆவார். குமாரஜீவர் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றின்படி, ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் அருகில் நாகார்ஜுனகொண்டா என்று அழைக்கப்படும் இடத்திற்கு அருகில் வசித்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் பாளி அல்லது பௌத்த கலப்பு சமற்கிருதம் உபயோகிக்காமல் தூய சமற்கிருதத்தை தமது நூல்களில் உபயோகப்படுத்தியுள்ளார். அவர் தமது சீடரான ஆரியதேவருடன் கூடி ப்ரஜ்ஞா பரமித (அதாவது பரிபூரண ஞானம்) சூத்திரங்களின் தத்துவத்தை வளர்த்ததற்காகவும், நாலந்தா பல்கலைக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. ஜப்பானில் புத்தமதத்தின் ஜோடோ ஷின்ஸூ பிரிவில் அவர் தலைமைக் குருவாகக் கருதப்படுகிறார்.
நாகார்ச்சுனர் నాగార్జున | |
---|---|
ஸ்காட்லான்டில் சாம்யே லிங் துறவி மடத்தில் நாகார்ஜுனரின் தங்க உருவச்சிலை | |
பிறப்பு | அண். கிபி 150 தென்னிந்தியா[1] |
இறப்பு | அண். கிபி 250 இந்தியா |
பணி | பௌத்த ஆசிரியர், மெய்யியலாளர் |
அறியப்படுவது | மகாயாண பௌத்தத்தின் மத்தியமிகம் பள்ளியை நிறுவியவர் |
சமயம் | பௌத்தம் |
புகழ் பெற்ற இவரது சீடர்களில் ஒருவர் ஆரியதேவர் ஆவார்.