கோல்கொண்டா சுல்தானகம்
From Wikipedia, the free encyclopedia
கோல்கொண்டா சுல்தானகம் அல்லது குதுப் சாகி வம்சம், (Qutb Shahi dynasty or Golconda Sultanate) தென்னிந்தியாவின் தற்கால தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளை, கோல்கொண்டாவை தலைநகரமாகக் கொண்டு 1518 முதல் 1686 முடிய ஆண்ட பாரசீக சியா இசுலாமியர்கள் ஆவர்.[3][4] [5]
கோல்கொண்டா சுல்தானகம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1518–1687 | |||||||||
குதுப் சாகி வம்சத்தின் கோல்கொண்டா சுல்தானகத்தின் கொடி | |||||||||
தலைநகரம் | கோல்கொண்டா (1519-1591) ஐதராபாத் (1591-1687) | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம்(அலுவல் மொழி)[1] தெலுங்கு[2] | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
குதுப் ஷா | |||||||||
• 1512–1543 | சுல்தான் குயுலி குதுப் உல் முல்க் | ||||||||
• 1543–1550 | ஜம்சீத் கியுலி ஷா | ||||||||
• 1543–1550 | சுபான் கியுலி ஷா | ||||||||
• 1550–1580 | இப்ராகிம் கியுலி குதுப் ஷா வலி | ||||||||
• 1565-1612 | முகமது கியுலி குதுப் ஷா | ||||||||
• 1611–1626 | சுல்தான் முகமது குதுப் ஷா | ||||||||
• 1626–1672 | அப்துல்லா குதுப் ஷா | ||||||||
• 1672-1686 | அப்துல் ஹசன் ஷா | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1518 | ||||||||
• முடிவு | 1687 | ||||||||
பரப்பு | |||||||||
[convert: invalid number] | |||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
கோல்கொண்டா சுல்தான்கள் அடிக்கடி பிஜப்பூர் சுல்தான்களுடன் பிணக்கு கொண்டிருந்தனர்.[6] 1687ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கோல்கொண்டா சுல்தானகத்தை வெற்றி கொண்டு முகலாயப் பேரரசுடன் இணைத்தார்.
கோல்கொண்டா குதுப் சாகி வம்சத்தை நிறுவிய சுல்தான் கியுலி குதுப் உல் முல்க், 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தற்கால ஈரானிலிருந்து, தில்லியில் குடியேறிவர். பின்னர் தென்னிந்தியாவின் பாமினி சுல்தான் முகமது ஷாவின் கீழ் படைத்தலைவராக பணியாற்றியவர்.[7]
பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1512ல் தக்காணத்தின் கோல்கொண்டா பிரதேசங்களைக் கைப்பற்றி, தன்னை கோல்கொண்டா சுல்தானாக 1512ல் அறிவித்துக் கொண்டார்.
இதே காலகட்டத்தில் பாமினி சுல்தானகத்தின் பிற படைத்தலைவர்கள் பாமினி சுல்தானகத்தின் பிற பகுதிகளைக் கைப்பற்றி, அகமதுநகர் சுல்தானகம் பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகங்களை நிறுவி தன்னாட்சியுடன் ஆண்டனர்.
கோல்கொண்டா சுல்தான் தற்கால ஐதராபாத் அருகே சார்மினார் பள்ளிவாசலைக் கட்டினார். கோல்கொண்டாவிற்குப் பின் சுல்தானகத்தின் தலைநகரமாக ஐதராபாத் விளங்கியது.[7] 1687ல் அவுரங்கசீப் கோல்கொண்டா சுல்தானகத்தை கைபப்ற்றும் வரை, கோல்கொண்டா சுல்தான்கள் 171 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர்.[8]