ஒன்பதாம் திருமுறை
From Wikipedia, the free encyclopedia
ஒன்பதாம் திருமுறை என்பது சைவத் திருமுறைகள் வைப்பினிலே திருமாளிகைத் தேவர் உட்பட 9 பேர் பாடிய பாடல்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதில் 303 பாடல்கள் அடங்கியுள்ளன..இத் திருமுறையிலுள்ள பாடல்கள் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என இரண்டு வகையாகப் பார்க்கப்படுகின்றன.
விரைவான உண்மைகள்
சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி |
7 - தேவாரம்
|
11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)
|
மூடு
ஒன்பதாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 14 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க:
- சிதம்பரம் -16
- கங்கைகொண்ட சோழேச்சரம் - 1
- திருக்களந்தை ஆதித்தேச்சரம் - 1
- திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் - 1
- திருமுகத்தலை - 1
- திரைலோக்கிய சுந்தரம் - 1
- திருப்பூவணம் - 1
- திருச்சாட்டியக்குடி - 1
- தஞ்சை பெருங்கோவில் - 1
- திருவிடைமருதூர் - 1
- திருவாரூர் -1
- திருவீழிமிழழை - 1
- திருவாவடுதுறை - 1
- திருவிடைக்கழி - 1