சேந்தனார்
From Wikipedia, the free encyclopedia
சேந்தனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருப்பல்லாண்டு பாடிய அருளாளர் ஆவார். இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தோன்றியவர்.[1] பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்காளராக இருந்த சமயம் அவரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அதில் உள்ள பொருள்களை எடுத்துச்செல்லுமாறு செய்தார். இதை அறிந்த பட்டினத்தாரின் சுற்றத்தவர்கள் சோழ மன்னனிடம் முறையிடவே மன்னன் சேந்தனாரைச் சிறையில் அடைந்தான். சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.