கல்லாடனார் (சங்க காலம்)
From Wikipedia, the free encyclopedia
கல்லாடனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பதினொரு பாடல்கள் சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன.[1] அவற்றில் இவர் பல அரசர்களையும், நாட்டுமக்களையும் குறிப்பிட்டுள்ளார். சைவ திருமுறையான பதினொன்றாம் திருமுறையில் நக்கீர தேவர் இயற்றிய திருக்கண்ணப்பதேவர் திருமறத்திற்கு பிறகு இவரது பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன.[1] சங்காலப் புலவரான இவரை கல்லாடதேவர், கல்லாட தேவ நாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.[1] இவர் கி.பி. 9ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
கல்லாடம் என்பது வேங்கட மலைக்கு வடபால் ஆந்திர மாநிலத்தில் உள்ளதோர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த புலவர் கல்லாடனார். இவர் தன் குடும்பம் பசியால் வாடியபோது காவிரிப் படுகை நோக்கி வந்தார். வழியில் பொறையாற்று கிழானும், அம்பர் கிழான் அருவந்தையும் இவரைப் பேணிப் பாதுகாத்தனர். இவர் மேலும் தென்திசை நோக்கிச் சென்றார். நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை நேரில் கண்டு பாடியுள்ளர். பாண்டியனும் இவருக்குப் பரிசில் பல நல்கினான்.