எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் இருபத்தி எட்டாம் வம்சம் (Twenty-eighth Dynasty of Egypt or Dynasty XXVIII, alternatively 28th Dynasty or Dynasty 28) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட வம்சங்களில் இது மூன்றாவதாகும். கிமு 404-இல் பாரசீக அகாமனிசியப் பேரரசின் இருபத்தி ஏழாம் வம்சத்தவரை, மண்ணின் மைந்தர்களான இந்த 28-ஆம் வ்ம்ச பார்வோன் அமியுர்தயுஸ் என்ற நான்காம் சாம்திக், மக்கள் புரட்சி மூலம் வென்று, தெற்கு எகிப்தின் சைஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு கிமு 404 முதல் கிமு 399 முடிய 4 ஆண்டுகள் மட்டுமே எகிப்தை ஆட்சி செய்தனர்.[1]
விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்28-வது வம்சம், தலைநகரம் ...
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 28-வது வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 404–கிமு 398 | |||||||||
தலைநகரம் | சைஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் | ||||||||
• தொடக்கம் | கிமு 404 | ||||||||
• முடிவு | கிமு 398 | ||||||||
|
மூடு
கிமு 404-இல் 28-ஆம் வம்ச பார்வோன் அமியுர்தயுசைக் கொன்று, கிமு 404-இல் இருபத்தி ஒன்பதாம் வம்சதவனான முதலாம் நெபாருத் என்பவர், எகிப்தில் தனது 29-ஆம் வம்ச ஆட்சியை நிறுவினார்.[2]