இந்திய அரசு காசாலை
From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசு காசாலை (India Government Mint) என்பது இந்திய நாணயங்களை உற்பத்தி செய்வதற்காக நாட்டில் நான்கு காசாலைகளை நிறுவியுள்ளது. இவை கீழ்க்கண்ட நகரங்களில் அமைந்துள்ளன.[1]
வகை | இந்திய அரசு |
---|---|
தலைமையகம் | மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், நொய்டா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | நாணயம், பதக்கம் உற்பத்தி |
1906 நாணயச் சட்டத்தின்[2] கீழ், இந்திய ரிசர்வ் வங்கிக்கு நாணயங்களை உற்பத்தி செய்து வழங்குவதாக இந்திய அரசு காசாலைகளை நிறுவியது. ரிசர்வ் வங்கி வழங்கும் வருடாந்திர தேவைப்பட்டியலுக்கு ஏற்ப இந்திய அரசு நாணய உற்பத்தித் திட்டத்தை உருவாக்குகிறது.[3]
மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்தில் உள்ள காசாலைகள் நாணய அச்சுகளை உருவாக்குகின்றன. ஐதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா காசாலைகள் தங்க மதிப்பீட்டு வசதிகளைக் கொண்டுள்ளன. மும்பை காசாலை தரப்படுத்தப்பட்ட எடை மற்றும் அளவுடன் நாணயங்களை உற்பத்தி செய்கிறது. மும்பை காசாலையில் 999.9 வரை அதிநவீன தங்கச் சுத்திகரிப்பு வசதி உள்ளது. ஐதராபாத் காசாலையில் 999.9 வரை மின்னாற்பகுப்பு வெள்ளி சுத்திகரிப்பு வசதியைக் கொண்டுள்ளது.
நினைவு நாணயங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் தயாரிக்கப்படுகின்றன. கொல்கத்தா மற்றும் ஐதராபாத் காசாலைகளில் பதக்கங்களை உருவாக்குவதற்கான வசதிகளும் உள்ளன. நொய்டா காசலை எஃகு நாணயங்களை உருவாக்க நாட்டில் முதலில் காசாலையாகும்.