![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Victoria_Memorial_on_the_lake%252C_Kolkata%252C_India.jpg/640px-Victoria_Memorial_on_the_lake%252C_Kolkata%252C_India.jpg&w=640&q=50)
கொல்கத்தா
மேற்கு வங்கத்தின் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
கொல்கத்தா (வங்காள மொழி: কলকাতা) (முன்பு கல்கத்தா) என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும்.[10] இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.[11] கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும்.[12]
கொல்கத்தா
কলকাতা (வங்காளம்) கல்கத்தா | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 22°34′03″N 88°22′12″E | |
நாடு | ![]() |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
கோட்டம் | இராஜதானி பர்த்வான் |
மாவட்டங்கள் | கொல்கத்தா வடக்கு 24 பர்கனா தெற்கு 24 பர்கனா நதியா ஹவுரா ஹூக்லி[1][2][3][4][5] |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | கொல்கத்தா மாநகராட்சி |
• மேயர் | பாபி ஹக்கிம் |
• துணை மேயர் | அதின் கோஷ் |
பரப்பளவு | |
• மாநகரம் | 206.08 km2 (79.151 sq mi) |
• மாநகரம் | 1,886.67 km2 (728.45 sq mi) |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | ![]() |
• தரவரிசை | 3வது |
• நகர்ப்புறம் | ![]() 1,46,17,882 (Extended UA) |
இனங்கள் | கொல்கத்தான் கல்கத்தான் |
மொழி | |
• அலுவல்மொழி | வங்காளம் • ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 ( இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 700 xxx |
தொலைபேசி குறியீடு | +91 33 |
வாகனப் பதிவு | WB-01 முதல் WB-10 வரை |
UN/LOCODE | IN CCU |
கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் கொல்கத்தா நகரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சி ஆகிய பல அரசியல் மற்றும் சமுக மாற்றங்களில் கொல்கத்தா நகர் மற்ற இந்திய நகர்களை விட மாறுபட்டது.