இந்திய ரிசர்வ் வங்கி
நடுவண் வங்கி / From Wikipedia, the free encyclopedia
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது. பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜண்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் பதவியில் உள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முத்திரை இந்திய ரிசர்வ் வங்கியின் சின்னம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் | |
துவக்கம் | 1 ஏப்ரல் 1935; 89 ஆண்டுகள் முன்னர் (1935-04-01)[1] |
---|---|
உரிமையாளர் | நிதி அமைச்சகம், இந்திய அரசு |
ஆளுநர் | சக்திகாந்த தாஸ்,[2] இ.ஆ.ப (ஓய்வு பெற்ற) |
மத்திய வங்கி | இந்தியா |
நாணயம் | இந்திய ரூபாய் ( ₹ ) |
ஒதுக்குகள் | $576.76 பில்லியன்[3] |
வங்கி விகிதம் | 6.5%[4] |
இருப்புக்கள் மீதான வட்டி | 3.35% (சந்தை தீர்மானிக்கப்படுகிறது)[4] |
வலைத்தளம் | வார்ப்புரு:Official url |