அனில் சவுகான்
From Wikipedia, the free encyclopedia
தரைப்படை கட்டளையாளர் இளநாயகம் அனில் சவுகான் பிவிஎஸ்எம், யுஒய்எஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம் (Anil Chauhan) என்பவர் இந்தியத் தரைப்படையின் ஓய்வு பெற்ற தலைமை அதிகாரி ஆவார். இவர் 28 செப்டம்பர் 2022 அன்று பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 30 செப்டம்பர் 2022 அன்று பதவியேற்றார்.[1]
விரைவான உண்மைகள் பாதுகாப்புப்படைகளின் 2வது தலைமைப் படைத்தலைவர், குடியரசுத் தலைவர் ...
Lieutenant General அனில் சவுகான் | |
---|---|
பாதுகாப்புப்படைகளின் 2வது தலைமைப் படைத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 செப்டம்பர் 2022 (2022-09-28) | |
குடியரசுத் தலைவர் | திரௌபதி முர்மு |
பிரதமர் | நரேந்திர மோதி |
பாதுகாப்பு துறை | ராஜ்நாத் சிங் |
முன்னையவர் | பிபின் இராவத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 18, 1961 (1961-05-18) (அகவை 63) |
துணைவர் | அனுபமா சவுகன் |
முன்னாள் கல்லூரி |
|
விருதுகள் | பரம் விசிட்ட சேவா பதக்கம் உத்தம் சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் சேனா பதக்கம் விசிட்ட சேவா பதக்கம் |
Military service | |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை/சேவை | இந்தியத் தரைப்படை |
சேவை ஆண்டுகள் | 13 சூன் 1981 – 31 மே 2021 2022 – முதல் |
அலகு | 11வது கூர்க்கா துப்பாக்கி படை |
கட்டளை | கிழக்குப் படை பிரிவு III படை |
மூடு
லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இராணுவத் துணைத் தலைவராகப் பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் 2019 செப்டம்பரில் கிழக்கு படைத்தளக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார்.[2][3]
சவுகான் முன்பு இந்தியத் தரைப்படையின் இராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநராக பணியாற்றினார்.[4] இவர் முன்னர் இந்திய தரைப்படையின் III படையின் தளபதியாக இருந்தார். இவர் தரைப்படை கட்டளையாளர் அபய் கிருஷ்ணாவிடமிருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.[5][6][7][8][9]