இந்தியத் தரைப்படை
இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். / From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தரைப்படை என்பது இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும்.இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் ஆகிய பங்களில் ஈடுபடுகின்றது. இது இயற்கை பேரிடர் மற்றும் பிற இடையூறுகளின் போது மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்தியத் தரைப்படை Indian Army | |
---|---|
உருவாக்கம் | 26 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-26)(தற்போதைய வடிவத்தில்)
1 ஏப்ரல் 1895; 129 ஆண்டுகள் முன்னர் (1895-04-01)(பிரித்தானிய இந்திய இராணுவமாக) |
நாடு | இந்தியா |
வகை | தரைப்படை |
பொறுப்பு | தரைச் சண்டை |
அளவு | |
பகுதி | இந்தியப் பாதுகாப்புப் படைகள் |
தலைமையகம் | ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமையகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம், புது டெல்லி |
குறிக்கோள்(கள்) | சேவா பரமோ தர்மா ("தனக்கு முன் சேவை") |
நிறம் | தங்கம், சிவப்பு மற்றும் கருப்பு |
அணிவகுப்பு | கடம் கதம் பதாயே ஜா (முன்னோக்கிச் செல்லுங்கள்) |
ஆண்டு விழாக்கள் | இராணுவ தினம்: 15 சனவரி |
சண்டைகள் | |
இணையதளம் | indianarmy.nic.in |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | |
படைத்துறைச் சின்னங்கள் | |
கொடி | |
வானூர்திகள் | |
உலங்கு வானூர்தி | எச்ஏஎல் ருத்ரா, பிரசந்த், துருவ், சேத்தக், சீத்தா |
இந்திய தரைப்படை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இந்தியக் குடியரசுத் தலைவர் இந்திய தரைப்படையின் உச்ச தளபதியாக செயல்படுகிறார். இதன் தொழில்முறைத் தலைவராக தரைப்படைப் பணியாளர்களின் தலைவரான தரைப்படை தலைமைத் தளபதி செயல்படுகிறார். தரைப்படையின் தலைமைப் பதவி படைத்துறை உயர் தளபதியாகும். இந்நாள் வரை சாம் மானேக்சா மற்றும் கரியப்பா ஆகிய இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர்.
இந்தியத் தரைப்படை 1895 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் நிறுவப்பட்டது. இந்தப் படைகள் உலகப் போர்களில் பெரும் பங்காற்றின. இந்திய விடுதலைக்கு பிறகு அண்டை நாடுகளான பாக்கித்தான் மற்றும் சீனாவுடன் பல போர்களில் ஈடுபட்டுள்ளது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாக பணியாற்றியுள்ளது.
இந்தியத் தரைப்படை செயல்பாட்டு மற்றும் புவியியல் ரீதியாக ஏழு கட்டளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது, இவை மேலும் அடிப்படைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. நிரந்தர படைப்பிரிவுகள் தங்கள் சொந்த ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு பொறுப்பாகும். தன்னார்வப் படையான இந்தியத் தரைப்படை, 12 இலட்சத்திற்கும் அதிகமான தயார் நிலை துருப்புக்கள் மற்றும் ஏறத்தாழ 10 இலட்சம் இருப்பு வீரர்களுடன் உலகின் மிகப் பெரிய தரைப்படையாக உள்ளது.