சாம் மானேக்சா
முதல் படைத்துறை உயர்தர தளபதி / From Wikipedia, the free encyclopedia
சாம் ஹார்முஸ்ஜி பிரேம்ஜி ஜாம்ஷெட்ஜி மானெக்சா (Sam Hormusji Framji "Sam Bahadur" Jamshedji Manekshaw, ஏப்ரல் 3, 1914 – சூன் 27, 2008) என்னும் முழுப் பெயர் கொண்ட சாம் மானேக்சா நான்கு தலைமுறைகளாக இராணுவத்தில் பணிபுரிந்தவர். 40 ஆண்டுகால ராணுவ சேவையில் 5 போர்களைச் சந்தித்தவர். இந்திய இராணுவத்தின் எட்டாவது தலைமைத் தளபதியாக இருந்து இந்தியா வழிநடத்திய ஏனைய போர்களில் கலந்து கொண்டவர். இரண்டாம் உலகப்போரிலும், பாகித்தானுடனான போரிலும் இவரின் தலைமையில் இந்தியா போரை எதிர்கொண்டது. பாகிஸ்தானுடனான போரின்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியுடன் முரண்பட்டபோதும், போர்க்குணத்துடன் போராடி பாகிஸ்தானைத் தோற்கடித்துச் சரணடையச் செய்தவர்.[2] வங்கதேசம் எனும் தனிநாடு உருவாகக் காரணமாகி, இன்றுவரை அந்த நாட்டினரால் தங்களது தேசத்தின் மீட்பராக நினைவுகூரப்படுபவர். இரும்பு மனிதர் என்று போற்றத்தக்க உறுதி படைத்தவர். இந்தியாவின் மிக உயர்ந்த பதவியான பீல்டு மார்ஷல் பதவியை முதலில் பெற்றார். அப்பதவியை அடைந்தவர்கள் இருவரே. மற்றவர் கரியப்பா.
சாம் மானேக்சா | |
---|---|
![]() சாம் மானேக்சா எட்டாவது தலைமைத் தளபதி இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1914-04-03)ஏப்ரல் 3, 1914 அமிர்தசரஸ், பஞ்சாப் |
இறப்பு | சூன் 27, 2008(2008-06-27) (அகவை 94) வெலிங்டன், தமிழ்நாடு |
விருதுகள் | பத்ம விபூஷண் பத்ம பூஷண் Military Cross |
கையெழுத்து | |
புனைப்பெயர் | "சாம் பகதூர்" |
Military service | |
பற்றிணைப்பு | வார்ப்புரு:நாட்டுத் தகவல் பிரித்தானிய இந்தியா (1947 வரை) ![]() |
கிளை/சேவை | இந்திய படை |
சேவை ஆண்டுகள் | 1934–2008[1] |
தரம் | பீல்டு மார்சல் |
போர்கள்/யுத்தங்கள் | இரண்டாம் உலகப்போர் 1947 இந்திய பாகித்தான் போர் சீன இந்தியப் போர் 1965,இந்திய பாக்கித்தான் போர் வங்க விடுதலைப் போர் 1971 |