From Wikipedia, the free encyclopedia
இந்திய அமைதி காக்கும் படை (Indian Peace Keeping Force; IPKF) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.[சான்று தேவை] பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்திய அமைதி காக்கும் படை Indian Peace Keeping Force | |
---|---|
செயற் காலம் | யூலை 1987 – மார்ச் 1990 |
நாடு | இலங்கை |
பற்றிணைப்பு | இந்தியா |
கிளை | |
பொறுப்பு |
|
அளவு | 100,000 (உச்சம்) |
சண்டைகள் |
|
பதக்கம் | |
தளபதிகள் | |
குறிப்பிடத்தக்க தளபதிகள் | திபந்தர் சிங் கர்கிராட் சிங் எஸ். சி. சர்தேஸ்பாண்டே ஏ. ஆர். கல்கட் சிவகரன் அலோக் துபே எம்.பி பிரேமி VrC, VM IAF |
பின்னணி |
தமிழீழம் * இலங்கை • இலங்கை வரலாற்றுக் காலக்கோடு * இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு |
இலங்கை அரசு |
ஈழப் போரின் தொடக்கம் * கறுப்பு யூலை • இனக்கலவரங்கள் * மனித உரிமைகள் • இலங்கை அரச பயங்கரவாதம் • சிங்களப் பேரினவாதம் • தாக்குதல்கள் |
விடுதலைப் புலிகள் |
புலிகள் • தமிழீழம்* தமிழ்த் தேசியம் * புலிகளின் தாக்குதல்கள் * யாழ் முஸ்லீம்கள் கட்டாய வெளியேற்றம் |
முக்கிய நபர்கள் |
வே. பிரபாகரன் மகிந்த ராஜபக்ச சரத் பொன்சேகா |
இந்தியத் தலையீடு |
பூமாலை நடவடிக்கை இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய அமைதி காக்கும் படை ராஜீவ் காந்தி • RAW |
மேலும் பார்க்க |
இலங்கை இராணுவம் ஈழ இயக்கங்கள் கொல்லப்பட்ட முக்கிய நபர்கள் |
இலங்கை முரண்பாடுகளில் இந்திய அமைதி காக்கும் படை பங்கு இலங்கையிலும் இந்தியாவிலும் விமர்சிக்கப்பட்டது. இது பல மனித உரிமை மீறல்களை நடத்தியது. இதில் பாலியல் பலாத்காரங்கள், பொதுமக்கள் படுகொலைகள் ஆகியன உள்ளடங்கும். பல நடுநிலை அமைப்புகள் இந்திய இராணுவம் குடிமக்களின் பாதுகாப்பில் குறைந்த அக்கறையுடன் செயல்பட்டதாகவும், மனித உரிமைகளை மீறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளன. இது இலங்கை, இந்தியாவிற்குள்ளும், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்திய அமைதி காக்கும் படை ஒரு ஆக்கிரமிப்பு, அடக்குமுறை படையாக கருதப்பட்ட, கணிசமான கூக்குரலுக்கும் பொதுமக்களின் அதிருப்திக்கும் வழிவகுத்தது.
இந்தியப் படைகள் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் இருந்த காலத்தில் ஏராளமான பொதுமக்கள் படுகொலைகள், வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல்ள், பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.[1][2] யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 1989 ஆகஸ்ட் 2, 3, 4 ஆகிய தேதிகளில் இந்திய அமைதிப்படையினரால் 50 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட, வல்வெட்டித்துறை படுகொலை போன்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தமையும் இதில் அடங்கும். மேலும் 100 இற்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், பிற சொத்துக்களும் எரித்து அழிக்கப்பட்டன.[3]
1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் படுகொலையானது மற்றொரு குறிப்பிடத்தக்க சம்பவம் ஆகும். வைத்தியசாலைக்கு அருகில் தமிழ் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் விரைவாக வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்து 70 இற்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தனர். இந்த பொதுமக்களில் நோயாளிகள், சீருடையில் இருந்த இரண்டு மருத்துவர்கள், மூன்று தாதிகள், ஒரு குழந்தை மருத்துவ ஆலோசகர் அடங்குவர். இப்படுகொலைக்குப் பிறகு மருத்துவமனை முழுமையாக மீளவில்லை.[4][5][6]
இந்திய அமைதி காக்கும் படை சிங்கள குடிமக்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் பணிபுரிந்த மதராசுப் படையணி உடந்தையாக இருப்பதாக அப்போதைய இலங்கை அரசு குற்றம் சாட்டியது. இந்திய அதிகாரிகள் பொறுப்பை மறுத்தாலும், அவர்கள் திருகோணமலை மாவட்டத்திலிருந்து மதராசுப் படையணியை விலக்கிக் கொண்டனர்.[7]
1987 அக்டோபரில் இருந்து, விடுதலைப் புலிகளை நிராயுதபாணியாக்குவதற்காக இந்திய அமைதி காக்கும் படை மீது போரைத் தொடங்கியது. இந்த மோதலின் போது, இந்திய அமைதி காக்கும் படை ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது.[8] இந்திய அமைதி காக்கும் படைஅதிகாரி ஒருவர் இந்த பாலியல் வன்புணர்வுக்கு விளக்கம் அளித்தார்: "வன்புணர்வு ஒரு கொடூரமான குற்றம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் என் அன்புக்குரியவர்களே, எல்லாப் போர்களிலும் அவை உள்ளன. போர்ச் சோர்வு போன்ற உளவியல் காரணங்களால் அவை இடம்பெறுகின்றன."[9]
எண் | காலமும் இடமும் | கொலைகள் பற்றிய தகவல்கள் |
---|---|---|
1 | 14 ஆகத்து 1989, வல்வெட்டித்துறை | குழந்தைகள் உட்பட 64 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். |
2 | 21 அக்டோபர் 1987, யாழ்ப்பாண மருத்துவமனை | தீபாவளி அன்று 68 பொதும்க்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள், பணியாளர்கள், அதிகாரிகள், நோயாளிகளும் அடங்குவர். அவர்களின் உடல்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. யாழ்ப்பாண மருத்துவமனை படுகொலைக்கு 18 நாட்கள் கழித்து அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படை தன் கடமைகளை ஒழுக்கமாக செய்து வருவதாக அறிக்கை விட்டார். (லோக் சபா 9 நவம்பர் 1987)[சான்று தேவை] |
3. | 9 நவம்பர் 1987 | இந்திய அமைதி காக்கும் படையால் காயத்துக்கு உள்ளான 4 பொதுமக்கள் சாண்டிலிப்பையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வெள்ளைக் கொடியோடு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திய அமைதி காக்கும் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.[சான்று தேவை] |
4. | ஆகத்து 2-3, 1989 | 64 ஈழத்தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைக்களத்தில் இருந்த 300 பொதுமக்களும் சுப்பிரமணியம் மற்றும் சிவகணேசு வீட்டில் அடைக்கலம் அடைந்தனர். அவர்கள் வீடுகளுள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படை அடைக்கலம் அளித்த மற்றும் 12 பொதுமக்களையும் சுட்டுக்கொன்றது.[சான்று தேவை] |
5. | மொத்தம் | ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் பொதுமக்களை இந்திய அமைதி காக்கும் படை கொன்றுள்ளது.[சான்று தேவை] |
ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.[14] இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது.
இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம்[15] மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார்.[16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.