ஜனவரி 2008, 2008 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் ஜனவரி 15 இல் தொடங்கி பெப்ரவரி 12 இல் முடிவடைகிறது.
- ஜனவரி 31 - யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டு 15 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 31 - யாழ்ப்பாணம், தென்மராட்சியில் உள்ள மட்டுவிலில் மூன்று சகோதரர்கள் வரிசையாக நிற்கவிட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 29 - மன்னார் மாவட்டம் தட்சணாமருதமடுப் பகுதியில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஊர்தி மீது நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 மாணவர்கள் உள்ளிட்ட 17 பேர் கொல்லப்பட்டு, மேலும் 9 மாணவர்கள் உள்ளிட்ட 18 பேர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 25 - போலிக் கடவுச் சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துள் நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்ட கருணாவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று 9 மாத கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (தமிழ்வின்)
- ஜனவரி 25 - கிளிநொச்சியில் விவேகானந்த நகரில் இலங்கை விமானப்படை நடத்திய குண்டுவீச்சில் ஒரு பொதுமகன் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (தமிழ்நெட்)
- ஜனவரி 24 - அனுராதபுரம் மாவட்டம் கெப்பிட்டிக்கொல்லாவயில் 16 சடலங்கள் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இரண்டு குழிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (புதினம்)
- ஜனவரி 23 - இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சர்வ கட்சி ஆலோசனை குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது. (தினக்குரல்)
- ஜனவரி 21 - மொனறாகலை மாவட்டத்தில் தனமன்வில பகுதியில் அமைந்திருந்த காவல்துறைக் காவலரண் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 17 - மொனறாகலை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 17 - கிளிநொச்சி நகரில் உள்ள கனகபுரம் பாடசாலை மற்றும் குடியிருப்புக்களை இலக்கு வைத்து இலங்கை வானூர்திகள் 20-க்கும் அதிகமான குண்டுகளை வீசியதில் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர். 8 வீடுகள் முற்றாக அழிந்தன. (புதினம்)
- ஜனவரி 16 - இலங்கையின் மொனறாகலை மாவட்டத்தில் புத்தள என்ற இடத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டு 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (பிபிசி)
- ஜனவரி 14 - மன்னார் பரப்பாங்கண்டல் பகுதியில் இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- ஜனவரி 14 - ஹொரவபொத்தான மற்றும் வவுனியாவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதல்களில் 4 இலங்கைப் படையினரும் ஒரு பொதுமகனும் கொல்லப்பட்டனர். (பதிவு)
- ஜனவரி 12 - மட்டக்களப்பு, காத்தான்குடியில் கர்பால பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பள்ளிவாசலின் பிரதம இமாம் உட்பட மூன்று முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 11 - கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். (புதினம்)
- ஜனவரி 8 - கொழும்பு புறநகர்ப் பகுதியான ஜா-எலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.எம். தசநாயக்க உட்பட மூவர் கொல்லப்பட்டனர். (தமிழின்வெற்றி)(புதினம்)
- ஜனவரி 6 - மன்னார் இலுப்பைக்கடவையில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பொறுப்பாளரான கேணல் அருள்வேந்தன் என்று அழைக்கப்படும் சார்ள்ஸ் உள்ளிட்ட 4 போராளிகள் கொல்லப்பட்டனர். (புதினம்)
- ஜனவரி 4 - முல்லைத்தீவு, அளம்பில், உடுப்புக்குளம் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் மிக்-27 மற்றும் கிபீர் ரக வானூர்திகள் செறிவாக நடத்திய குண்டுவீச்சில் 7 சிறார்கள் உள்ளிட்ட 13 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 4 - அம்பாறையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர். (புதினம்)
- ஜனவரி 3 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 அன்று இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக அக்குழு தெரிவித்தது. (புதினம்)
- ஜனவரி 3 -கெபிதிகொல்லாவையில் அமுக்கவெடியில் சிக்கி மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (தமிழின்வெற்றி), (டெய்லி மிரர்)
- ஜனவரி 2 - விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது. (புதினம்), (தமிழ்நெட்)
- ஜனவரி 2 -கொழும்பு கொம்பனித் தெருவில் நிப்பொன் உண்டுறை விடுதிக்கு முன்பாக இலங்கைப் படைத்துறையினர் பயணித்த பேருந்து மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதில் 2 படையினர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகினர். (பிபிசி), (தமிழின் வெற்றி)
- ஜனவரி 1 - கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். (புதினம்), (தமிழ்நெட்)
- ஜனவரி 1 - தியாகராஜா மகேஸ்வரன், கொழும்பு நாடாளுமன்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்
- ஜனவரி 10 - பாண்டியன், தமிழ்த் திரைப்பட நடிகர்
- ஜனவரி 11 - எட்மண்ட் ஹில்லரி, நியூசிலாந்து மலையேறி (பி. 1919)
- ஜனவரி 15 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938
- ஜனவரி 17 - பொபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க வீரர் (பி. 1943)
- ஜனவரி 22 - ஹீத் லெட்ஜர்,, ஹாலிவூட் நடிகர் (பி. 1979)
- ஜனவரி 26 - ஜோர்ஜ் ஹப்பாஷ், பாலஸ்தீனத் தலைவர் (பி. 1926)
- ஜனவரி 27 - சுகார்ட்டோ, இந்தோனீசியாவின் 2வது அதிபர் (பி. 1921)
- ஜனவரி 28 - செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர்