1470கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1470ஆம் ஆண்டு துவங்கி 1479-இல் முடிவடைந்தது.
1470
இந்த பகுதி
1470 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history)
- மார்ச் 12 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
- மே 15 – மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
- மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
- செப்டம்பர் 13 – இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
- அக்டோபர் 3 – இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
- பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
- யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
- இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.
1471
1472
1473
1475
1476
1477
1478
1479