![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a2/Trichy_montage1.jpg/640px-Trichy_montage1.jpg&w=640&q=50)
திருச்சிராப்பள்ளி
தமிழ்நாட்டின் பெரிய மாநகராட்சிகளுள் மூன்றாவது பெரிய மாநகராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli அல்லது Trichinopoly[கு 1]), இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி (Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது. மற்றும் திருச்சிராப்பள்ளி பெறுநகர மாநகராட்சி என்று தரம் உயர்த்தி கூடிய விரைவில் அறிவிக்கபட இருக்கிறது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி | |
---|---|
![]() மேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில்:ஜம்புகேசுவரர் கோயில், அரங்கநாதசுவாமி கோயில், தூய லூர்து அன்னை கிறித்தவத் தேவாலயம், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளியை ஸ்ரீரங்கம் தீவிலிருந்து பிரிக்கும் காவிரி ஆறு, மேலணை | |
அடைபெயர்(கள்): மலைக்கோட்டை மாநகரம் | |
ஆள்கூறுகள்: 10°47′25″N 78°42′17″E | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
பகுதி | சோழ நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | திருச்சிராப்பள்ளி மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சு. திருநாவுக்கரசர் |
• சட்டமன்ற உறுப்பினர் | இனிகோ எஸ். இருதயராஜ் (திருச்சி கிழக்கு) கே. என். நேரு (திருச்சி மேற்கு) அன்பில் மகேஷ் பொய்யாமொழி (திருவெறும்பூர்) மொ. பழனியாண்டி (திருவரங்கம்) |
• மாநகர மேயர் | திரு. அன்பழகன் திமுக |
• மாவட்ட ஆட்சியர் | பிரதீப் குமார் , இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 167.23 km2 (64.57 sq mi) |
• மாநகரம் | 211.51 km2 (81.66 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3 |
ஏற்றம் | 105 m (344 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 8,47,387 |
• தரவரிசை | 4 |
• அடர்த்தி | 5,100/km2 (13,000/sq mi) |
• பெருநகர் | 12,21,717 |
இனம் | தமிழர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 620 0xx & 621 0xx |
தொலைபேசி குறியீடு | 0431 |
வாகனப் பதிவு | TN-45, TN-48, TN-81 |
சென்னையிலிருந்து தொலைவு | 320 கி.மீ (207 மைல்) |
இணையதளம் | Trichy City Municipal Corporation |