காவிரி ஆறு
தென்னிந்தியாவில் உள்ள ஆறு / From Wikipedia, the free encyclopedia
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் காவிரி ஆறு காவிரி ஆறு, அமைவு ...
காவிரி ஆறு காவிரி ஆறு | |
---|---|
சிரீரங்கப்பட்டணத்தில் காவிரி ஆறு ஓடுகிறது | |
காவிரி ஆற்றின் வரைபடம் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம், தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி |
பகுதி | தென்னிந்தியா |
தோற்றம் | குடகு, கருநாடகம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தலைக்காவிரி, குடகு, மேற்குத் தொடர்ச்சி மலை, கருநாடகம் |
⁃ அமைவு | கருநாடகம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 12°23′N 75°29′E |
⁃ ஏற்றம் | 1,341 m (4,400 அடி) |
முகத்துவாரம் | வங்காள விரிகுடா |
⁃ அமைவு | காவிரிப்பூம்பட்டினம், தமிழ் நாடு, இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 11°21′40″N 79°49′46″E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 805 km (500 mi)[1] |
வடிநில அளவு | 81,155 km2 (31,334 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 677 m3/s (23,900 cu ft/s) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | கல்லணை (தெற்கு)[2] |
⁃ சராசரி | 400.716 m3/s (14,151.2 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | ஏரங்கி, ஏமாவதி, சிமுசா, ஆர்க்காவதி |
⁃ வலது | இலட்சுமண தீர்த்த, கபினி, பவானி, நொய்யல், அமராவதி, மாயாறு |
மூடு
அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.[3]