From Wikipedia, the free encyclopedia
சோழ நாடு (Chola Nadu, Cauver Delta) என்பது தற்போதைய இந்தியாவின், தென் பகுதியாகும் (தென்னிந்தியா). தென்னிந்தியாவின் பெரும் பகுதி சோழ மன்னர்களால் மிகவும் சிறப்பாக ஆளப்பட்டது. சோழர்கள் ஆண்ட காலம் பொற்காலம் என வரலாறு கூறுகிறது. சோழ நாட்டில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழியாகும். சோழ மன்னர்கள் சைவ மற்றும் வைணவ மதத்தை பின்பற்றினார்கள்.[சான்று தேவை]
சோழ நாடு Chola Nadu | |
---|---|
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | |
நாடு | இந்தியா |
மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | தமிழ்நாடு, புதுச்சேரி |
மாவட்டம் | காரைக்கால் (புதுச்சேரி) நாகப்பட்டினம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி திருவாரூர் அரியலூர் கடலூர் கரூர் பெரம்பலூர் |
பெயர்ச்சூட்டு | சோழர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,524 km2 (2,905 sq mi) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 51,91,035 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 609-614xxx,620xxx |
வாகனப் பதிவு | TN 45,46,48,51,68,82,55,47,50,49. |
மொத்த மாவட்டங்கள் | 10 |
முக்கிய நகரங்கள் | திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால், புதுக்கோட்டை, மன்னார்குடி, அரியலூர், பெரம்பலூர், அறந்தாங்கி, கறம்பக்குடி,பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை, சிதம்பரம், மணப்பாறை, துறையூர், வேதாரண்யம், திருவாரூர், நாகப்பட்டினம், குளித்தலை, ஒரத்தநாடு |
இது திராவிடதேசத்திற்கு தெற்கிலும், பாண்டியதேசத்திற்கு வடக்கிலும், விசாலமான பூமியில் பரவி இருந்த தேசம் ஆகும்.[1]
அரசன் பெயர் | ஆட்சியாண்டுகள் (பொ.ஊ.) | தந்தை | தலைநகரம் |
---|---|---|---|
விசயாலய சோழ வம்சம் | |||
விசயாலய சோழன் | 848-871 | சுராதிராசன்[2] | தஞ்சாவூர் |
ஆதித்த சோழன் | 871-907 | விசயாலய சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் பராந்தக சோழன் | 907-950 | ஆதித்த சோழன் | தஞ்சாவூர் |
கண்டராதித்த சோழன் | 950-955 | முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
அரிஞ்சய சோழன் | 956-957 | முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் | தஞ்சாவூர் |
இரண்டாம் பராந்தக சோழன் | 957-973 | அரிஞ்சய சோழன் | தஞ்சாவூர் |
ஆதித்த கரிகாலன் | 957-969 | இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் | தஞ்சாவூர், காஞ்சிபுரம் |
உத்தம சோழன் | 970-985 | கண்டராதித்த சோழன் | தஞ்சாவூர் |
முதலாம் இராசராச சோழன் | 985-1014 | இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் | தஞ்சாவூர் |
முதலாம் இராசேந்திர சோழன் | 1012–1044 | முதலாம் இராசராச சோழன் | தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் |
முதலாம் இராசாதிராச சோழன் | 1018–1054 | முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசேந்திர சோழன் | 1051–1063 | முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் | கங்கைகொண்ட சோழபுரம் |
வீரராசேந்திர சோழன் | 1063–1070 | இரண்டாம் இராசேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
அதிராசேந்திர சோழன் | 1070 | வீரராசேந்திர சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
சாளுக்கிய சோழர்கள் | |||
முதலாம் குலோத்துங்க சோழன் | 1070–1120 | முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
விக்கிரம சோழன் | 1118–1136 | முதலாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் குலோத்துங்க சோழன் | 1133–1150 | விக்கிரம சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசராச சோழன் | 1146–1163 | இரண்டாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இரண்டாம் இராசாதிராச சோழன் | 1163–1178 | இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் குலோத்துங்க சோழன் | 1173–1218 | இரண்டாம் இராசராச சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராசராச சோழன் | 1216–1256 | மூன்றாம் குலோத்துங்க சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
மூன்றாம் இராசேந்திர சோழன் | 1246–1279 | மூன்றாம் இராசராச சோழன் | கங்கைகொண்ட சோழபுரம் |
இந்த தேசத்தில் பூமி கிடைமட்டமாகவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்தும், மேடும், பள்ளமும், காணப்படும். இந்த தேசம் கிழக்கு மேற்கில் நீண்டும், தென்வடக்கில் குறுகியும் இருக்கும்.[3]
பொ.ஊ. 9 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளையும் சோழர்கள் ஆட்சி செய்தனர்.உறையூர் (தற்போது திருச்சிராப்பள்ளி நகரத்தின் ஒரு பகுதி) ஆரம்பகால சோழர்களின் தலைநகரமாக இருந்தது. பின்னர் இடைக்கால சோழர்களால் தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டது. பின்னர் சோழ மன்னர் இராசேந்திர சோழன் 11 ஆம் நூற்றாண்டில் தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். பின்னர் சோழ மன்னர் மூன்றாம் இராஜராஜ சோழன் 13 ஆம் நூற்றாண்டில் தலைநகரை பழையாறைக்கு மாற்றினான்.[4]
இந்த தேசத்தின் நான்கு பக்கங்களிலும் மலைகளை காணமுடியாது. இவை பெரும்பாலும் செழிப்பான பூமியாக இருக்கிறது.
கருனாடகதேசத்தின் தெற்குபகுதியில் சகயம் என்னும் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரிநதியானது, திருவரங்கம் அருகில் இரு நதியாகப் பிரிந்து வடபகுதி கொள்ளிடம் என்றும், தென்பகுதி காவிரி என்றும் சோழதேசத்தை செழிக்க வைக்கின்றது.
இந்த சோழதேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்றவைகளும், துவரை, கடலை போன்ற புன்செய் பயிர்களும் விளைகின்றது.
இந்த சோழதேசம் சோழ நாடு சோறுடைத்து சிறப்பு வாய்ந்த தேசமாகும்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.