குப்தப் பேரரசு
பண்டைய இந்தியப் பேரரசு (அண். பொ. ஊ. 3ம் நூற்றாண்டு - பொ. ஊ. 575) / From Wikipedia, the free encyclopedia
குப்தப் பேரரசு என்பது ஒரு பண்டைக் கால இந்தியப் பேரரசு ஆகும். இது பொ. ஊ. ஆரம்ப 4ஆம் நூற்றாண்டு முதல் பொ. ஊ. ஆரம்ப 6ஆம் நூற்றாண்டு வரை நிலைத்திருந்தது. இது அதன் உச்ச பட்ச நிலையின் போது, தோராயமாக பொ. ஊ. 319 முதல் 467 வரை, பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை உள்ளடக்கியிருந்தது.[6] பிற வரலாற்றாளர்கள் பின் வரும் இயல்பாக்கத்தை விவாதத்திற்கு உள்ளாக்குகின்ற போதிலும்,[note 1][note 2][9][10] சில வரலாற்றாளர்களால் இக்காலமானது இந்தியாவின் பொற்காலம் என்று கருதப்படுகிறது.[11] பேரரசின் ஆட்சி புரிந்த அரசமரபானது குப்தரால் நிறுவப்பட்டது. அரசமரபின் மிகுந்த குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களாக முதலாம் சந்திரகுப்தர், சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் ஸ்கந்தகுப்தர் ஆகியோர் திகழ்ந்தனர். பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டின் சமசுகிருத கவிஞரான காளிதாசன் குப்தர்கள் 21 இராச்சியங்களை இந்தியாவிற்குள்ளும், இந்தியாவிற்கு வெளியிலும் வென்றுள்ளனர் என்று குறிப்பிடுகிறார். இதில் பாரசீகர்கள், ஊணர்கள், காம்போஜர், ஆக்சசு பள்ளத்தாக்கின் மேற்கு மற்றும் கிழக்கில் அமைந்திருந்த பழங்குடியினங்கள், கிண்ணரர், கிராதர் மற்றும் பிறரும் அடங்குவர்.[12][13][14]
குப்தப் பேரரசு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். பொ. ஊ. 319–அண். 550 | |||||||||||||||
நிலை | பேரரசு | ||||||||||||||
தலைநகரம் | பாடலிபுத்திரம் அயோத்தி[2][3] | ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் (இலக்கியம் மற்றும் கல்வி மொழி); பிராகிருதம் (பேச்சு வழக்கு மொழி) | ||||||||||||||
சமயம் | |||||||||||||||
மக்கள் | இந்தியர் | ||||||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||||||
பேரரசர் | |||||||||||||||
• 240–280 | ஸ்ரீகுப்தர் | ||||||||||||||
• 280 – 319 | கடோற்கஜன் | ||||||||||||||
• 320 - 335 | முதலாம் சந்திரகுப்தர் | ||||||||||||||
• 335 - 375 | சமுத்திரகுப்தர் | ||||||||||||||
• 375 - 415 | இரண்டாம் சந்திரகுப்தர் | ||||||||||||||
• 415 – 455 | முதலாம் குமாரகுப்தர் | ||||||||||||||
• 455 – 467 | ஸ்கந்தகுப்தர் | ||||||||||||||
• 467 – 473 | புருகுப்தர் | ||||||||||||||
• 476 – 495 | புத்தகுப்தர் | ||||||||||||||
• 540 – 550 | விஷ்ணுகுப்தர் | ||||||||||||||
• 550–? | பானுகுப்தர் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பண்டைக் கால இந்தியா | ||||||||||||||
• தொடக்கம் | அண். பொ. ஊ. 319 | ||||||||||||||
• முடிவு | அண். 550 | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
400 மதிப்பீடு.[4] (உச்சபட்ச பரப்பளவின் அதிகபட்ச மதிப்பீடு) | 3,500,000 km2 (1,400,000 sq mi) | ||||||||||||||
440 மதிப்பீடு.[5] (உச்சபட்ச பரப்பளவின் குறைந்த பட்ச மதிப்பீடு) | 2,500,000 km2 (970,000 sq mi) | ||||||||||||||
| |||||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் வங்காளதேசம் நேபாளம் |
இக்காலத்தின் உயர் நிலைகளாக பெரும் பண்பாட்டு முன்னேற்றங்கள் கருதப்படுகின்றன. இவை முதன்மையாக சமுத்திரகுப்தர், இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் முதலாம் குமாரகுப்தரின் ஆட்சிக் காலங்களின் போது நடைபெற்றன. மகாபாரதம் மற்றும் இராமாயணம் போன்ற பல இந்து இதிகாசங்கள் மற்றும் இலக்கிய நூல்கள் இக்காலத்தின் போது தான் திருமுறையாக்கப்பட்டன.[15] காளிதாசன்,[16] ஆரியபட்டர், வராகமிகிரர் மற்றும் வாத்சாயனர் போன்ற அறிஞர்களையும் குப்தர் காலமானது உருவாக்கியது. இவர்கள் பல கல்வி சார்ந்த தளங்களில் பெரும் முன்னேற்றங்களை அடைந்தனர்.[17][18][19] குப்தர் சகாப்தத்தின் போது அறிவியல் மற்றும் அரசியல் நிர்வாகமானது புதிய உயரங்களை அடைந்தது.[18] இக்காலமானது சில நேரங்களில் பாக்ஸ் குப்தா என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் குப்த அமைதி என்பதாகும். கட்டடக் கலை, சிற்பக் கலை மற்றும் ஓவியக் கலையில் சாதனைகள் இக்காலத்தில் அடையப்பட்டன. "இந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவின் எல்லைகளைத் தாண்டியும் கலையின் ஒட்டு மொத்த இறுதியான போக்கைத் தீர்மானித்த வடிவம் மற்றும் கலை நய உணர்வுக்குப் புதிய அளவீடுகளை இக்காலமானது அமைத்தது".[20] வலிமையான வணிகத் தொடர்புகள் இப்பகுதியை ஒரு முக்கியமான பண்பாட்டு மையமாக மாற்றினர். இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருந்து அண்டை இராச்சியங்கள் மற்றும் பகுதிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு அடித்தளமாக இப்பகுதியை நிறுவின.[21][நம்பகத்தகுந்த மேற்கோள்?] புராணங்கள் எனப்படும் பல்வேறு ஆய்வுப் பொருட்கள் குறித்த தொடக்க கால நீண்ட பாடல்கள் இக் காலத்தின் போது தான் எழுதப்பட்ட நூல்களாகவும் கூட உருவாயின என்று கருதப்படுகிறது.[20][22] இதன் ஆட்சியாளர்கள் இந்து சமயத்தைப் பின்பற்றினர். குப்தப் பேரரசில் பிராமணர்கள் வளர்ச்சியடைந்து இருந்தனர். ஆனால் குப்தர்கள் பிற நம்பிக்கைகளைக் கொண்ட மக்களிடமும் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டனர்.[23]
பதின்ம எண்முறை, இந்திய எண் முறை மற்றும் பூஜ்ஜியம் குப்தப் பேரரசுக் காலத்துக் கண்டுபிடிப்புக்களே. வரலாற்றாளர்கள், செந்நெறி நாகரிகத்தின் ஒரு மாதிரியாக குப்தப் பேரசை, ஹான் பேரரசு, தாங் பேரரசு மற்றும் ரோமப் பேரரசுடன் ஒன்றாக வைத்து எண்ணுகிறார்கள்.[24][25] மேலும் குப்தர்கள் காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், தருக்கம், கணிதம், வானவியல், இந்தியத் தத்துவம், சோதிடம், இந்து தொன்மவியல், இந்து சமயம், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற சமயங்கள் செழித்ததுடன், இந்துப் பண்பாடு, சமசுகிருத மொழி இலக்கியங்கள் வளர்ந்தது. இரண்டாம் சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் பண்பாட்டு, நாகரீகம், கலைகள், இலக்கியங்கள் நன்கு வளர்ச்சி அடைந்தது.[26] குப்தர்களின் ஆட்சியில் கவிஞர் காளிதாசன், வானிலை மற்றும் கணித அறிஞர்களான ஆரியபட்டர் மற்றும் வராகமிகிரர், பஞ்சதந்திர நூலை எழுதிய விஷ்ணு குப்தர், காம சூத்திரம் நூலை எழுதிய வாத்சாயனர், ஆயுர்வேத மருத்துவரான சுஸ்ருதர் போன்ற பல்கலை அறிஞர்கள் வாழ்ந்தனர்.[27]
இவர்களது சொந்த முந்தைய நிலப்பிரபுக்கள், மேலும் நடு ஆசியாவைச் சேர்ந்த ஊணர்களின் (கிடாரிகள் மற்றும் அல்கான் ஹூனர்கள்) படையெடுப்புகள் போன்றவற்றால் விளைவிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அளவிலான நிலப்பரப்பு மற்றும் ஏகாதிபத்திய அதிகாரத்தின் இழப்பு போன்ற காரணிகளின் காரணமாக பேரரசானது இறுதியாக வீழ்ச்சியடைந்தது.[28][29] 6ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவானது மீண்டும் ஏராளமான மாகாண இராச்சியங்களால் ஆட்சி செய்யப்பட்டது.