![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/South_Asia_historical_AD375_EN.svg/langta-640px-South_Asia_historical_AD375_EN.svg.png&w=640&q=50)
வாகாடகப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
வாகாடகப் பேரரசு (Vakataka Empire) (Vākāṭaka), (ஆட்சிக் காலம்: கி. பி 250 - 500), இந்தியாவின் தக்கானப் பகுதியில் கி. பி மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய இந்திய இந்துப் பேரரசாகும். இப்பேரரசு வடக்கே மால்வா மற்றும் குஜராத் பகுதியிலிருந்து, தெற்கே துங்கபத்திரை ஆறும், மேற்கே மகாராஷ்டிரம் வரையும், கிழக்கே தற்கால சத்திஸ்கர் வரை பரவியிருந்தது. விந்தியசக்தி மன்னர் கி. பி 250-270இல் தோற்றுவித்த இப்பேரரசை, கி. பி 250 முதல் 500 வரை தொடர்ந்து பல வாகாடக அரசர்கள் ஆட்சி செய்தனர். இப்பேரரசின் தலைநகராக தற்கால மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாசிம் நகரம் ஆகும்.இப்பேரரசின் அரசர்கள் பலர் அஜந்தா குகைக் கோயில்கள் எழுப்பினர். கலை, இலக்கியம் செழித்தது.[1][2]
வாகாடகப் பேரரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 250–கிபி 500 | |||||||||
தலைநகரம் | வாசிம் நகரம் | ||||||||
பேசப்படும் மொழிகள் | சமசுகிருதம் மகாராஷ்டிரீ, பிராகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மகாராஜா | |||||||||
• 250–270 | விந்தியசக்தி | ||||||||
• 270–330 | முதலாம் பிரவரசேனன் | ||||||||
• 475–500 | ஹரிசேனன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரிய இந்திய அரசுகள் | ||||||||
• தொடக்கம் | கிபி 250 | ||||||||
• முடிவு | கிபி 500 | ||||||||
|
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/South_Asia_historical_AD375_EN.svg/640px-South_Asia_historical_AD375_EN.svg.png)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6c/South_Asia_historical_AD450_EN.svg/640px-South_Asia_historical_AD450_EN.svg.png)
வாகாடகப் பேரரசு, தக்கானப் பீடபூமியில், சாதவாகனர்களுக்குப் பின்னர் தோன்றியதும், குப்த பேரரசுக்கு சமகாலத்திய பேரரசாகும்.
குப்த பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர், தன் விதவை மகளை, வாகாடக இளவரசருக்கு திருமணம் செய்து கொடுத்ததின் மூலம், வாகாடகர்களின் ஆதரவுடன் 4ஆம் நூற்றாண்டில் மேற்கு சத்திரபதிகளை வென்று குஜராத்தை, குப்த பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
வாகாடகப் பேரரசர் அரிசேனன் ஆதரவில், அஜந்தா குகைச் சிற்பங்களும், இலக்கியங்களும், கலைகளும் செழித்தோங்கியது.