வராகமிகிரர்
From Wikipedia, the free encyclopedia
வராகமிகிரர் (Varahamihira, பொ.ஊ. 505-587) உச்சையினியில் வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடரும் ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்கிரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்.[1][2]
விரைவான உண்மைகள் வராகமிகிரர், பிறப்பு ...
வராகமிகிரர் | |
---|---|
பிறப்பு | பொ.ஊ. 505 |
இறப்பு | பொ.ஊ. 587 |
தொழில் | இந்திய சோதிடர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | வானியல், சோதிடம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பஞ்ச சித்தாந்திகம், பிருகத் சம்கிதம் (Brihat-Samhita), பிருகத சாதகம் (Brihat Jataka) |
மூடு