காளிதாசன்
From Wikipedia, the free encyclopedia
காளிதாசன் (தேவநாகரி: कालिदास) சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய இந்தியக் கவிஞர், நாடகாசிரியர். காளிதாசரைப் பற்றிய முழுமையான வரலாற்றுக்குறிப்புகள் அறியப்படவில்லை.[1] ஆயினும், இவரது படைப்புகளான சாகுந்தலம், மேகதூதம், இரகுவம்சம், குமாரசம்பவம், மாளவிகாக்கினிமித்திரம், விக்கிரமோர்வசியம், ருது சம்ஹாரம் ஆகியவை இந்திய மொழி இலக்கியங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. இவர் குப்தரகளின் காலத்தில் வாழ்ந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.[2][3] இவரின் காவியங்கள் இயற்கை அழகை வருணிப்பதாகவும், அக்காலத்தே வாழ்ந்த மக்களின் பண்பாட்டை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் காளிதாசர், பிறப்பு ...
காளிதாசர் | |
---|---|
மேகதூதம் இயற்றும் காளிதாசன் (கற்பனை ஓவியம்) | |
பிறப்பு | பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டு |
இறப்பு | உஜ்ஜைன், குப்தப் பேரரசு |
தொழில் | கவிஞர் |
தேசியம் | இந்தியன் |
வகை | சமசுகிருத நாடகங்கள், கவிதை இலக்கியங்கள் |
கருப்பொருள் | காவியம், நாடகங்கள், புராணங்கள், |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சாகுந்தலம், இரகுவம்சம், மேகதூதம், குமாரசம்பவம், விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்திரம் மற்றும் ருது சம்ஹாரம் |
மூடு