ஏப்ரல் 13 (April 13) கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.
- 1570 – கை பாக்சு, வெடிமருந்து சதித்திட்டத்தைத் தீட்டிய ஆங்கிலேயப் போர்வீரர் (இ. 1606)
- 1743 – தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ. 1826)
- 1817 – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக், பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906)
- 1901 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1981)
- 1905 – புருனோ ரோசி, இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993)
- 1913 – மே. ரா. மீ. சுந்தரம், தமிழக எழுத்தாளர், கவிஞர் (இ. 1995)
- 1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959)
- 1930 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (இ. 2019)
- 1940 – ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-மொரீசிய எழுத்தாளர்
- 1949 – கிறித்தோபர் இட்சன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 2011)
- 1960 – ரவூப் ஹக்கீம், இலங்கை அரசியல்வாதி
- 1962 – நிருபமா ராஜபக்ச, இலங்கை அரசியல்வாதி
- 1963 – காரி காஸ்பரொவ், உருசிய சதுரங்க ஆட்ட வீரர்
- 1918 – இலாவர் கோர்னிலோவ், உருசிய இராணுவத் தளபதி (பி. 1870)
- 1941 – ஆன்னி ஜம்ப் கெனான், அமெரிக்க வானியலாளர் (பி. 1863)
- 1973 – டட்லி சேனாநாயக்க, இலங்கையின் அரசியல்வாதி, பிரதமர் (பி. 1911)
- 1973 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (பி. 1913)
- 1990 – எஸ். பாலச்சந்தர், தமிழக வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1927)
- 2015 – எதுவார்தோ காலியானோ, உருகுவே ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1940)
- 2015 – கூன்டர் கிராசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (பி. 1927)