இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள், என்பவை 2019 அசாமில் தொடங்கி டெல்லி, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய ஒரு போராட்டமாகும். இப்போராட்டங்கள், பொதுவாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை எதிர்த்தும், சில இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்தும் நடைபெற்றன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், டிசம்பர் 4, 2019 அன்று அசாமில் போராட்டங்கள் தொடங்கியது. பின்னர், வடகிழக்கு இந்தியா முழுவதிலும், மெதுவாக இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. டிசம்பர் 15 அன்று, போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் வளாகத்திற்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்தனர். போலீசார் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் மற்றும் சுமார் நூறு மாணவர்கள் ஒரே இரவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். போலீசாரின் மிருகத்தனம் பரவலாக விமர்சிக்கப்பட்டது, இதன் விளைவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, போராட்டங்களின் விளைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதுகள் நடைபெற்றுள்ளன. மேலும் ஆறு பேர் இறந்தனர். அசாமில் போலீசாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக கொல்லப்பட்டதாகக் கூறப்படுபவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.
Citizenship Amendment Act protests | |||
---|---|---|---|
Part of the Protests of 2019 | |||
ஜாமியா மில்லியா இஸ்லாமியா students protesting, protests in குவகாத்தி and மேகாலயா, protestors stopping traffic. | |||
தேதி | 4 December 2019 - ongoing | ||
அமைவிடம் | |||
காரணம் |
| ||
இலக்குகள் |
| ||
முறைகள் | குடியியற் சட்டமறுப்பு, demonstrations, Gherao, உண்ணாநிலைப் போராட்டம், ஹர்த்தால், vandalism, hashtag activism, general strike (கடையடைப்பு) | ||
நிலை | Ongoing
| ||
தரப்புகள் | |||
| |||
வழிநடத்தியோர் | |||
(No centralized leadership)
மம்தா பானர்ஜி[19] | |||
உயிரிழப்புகள் | |||
இறப்பு(கள்) | 9 (including 2 minors)[23][24][25] | ||
காயமுற்றோர் | 175[26] (reported as of 16 December) |