![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c0/All_India_Trinamool_Congress_flag.svg/langta-640px-All_India_Trinamool_Congress_flag.svg.png&w=640&q=50)
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
இந்திய அரசியல் கட்சி / From Wikipedia, the free encyclopedia
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (வங்காள மொழி: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது முன்பு மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார்.
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস | |
---|---|
![]() | |
தலைவர் | மம்தா பானர்ஜி |
தொடக்கம் | சனவரி 1, 1998 (1998-01-01) |
தலைமையகம் | 30B, ஹரிஷ் சாட்டர்ஜி தெரு, கொல்கத்தா, 700 026 |
இ.தே.ஆ நிலை | மாநில கட்சி [1] |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998-2006) ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2009-2011) கூட்டாட்சி முன்னணி (2019) |
இணையதளம் | |
aitmc | |
இந்தியா அரசியல் |
இந்திய தேசிய காங்கிரசிலிருந்து டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசைத் தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சியே வடிவமைத்தார்.
இந்திய தேசிய காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரசு நெருக்கமடைவதை அடுத்து மம்தா பானர்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டு சுபர்ட்டா முகர்சி 2005ல் விலகிச் சென்றார். அப்போது அவர் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்தார். 59 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரும், 55 கவுன்சிலர்களில் 11 பேரும் இவரை ஆதரித்ததாகக் கூறினார்.[2]
2004-ல் தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய பி. ஏ. சங்மா தன் ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.