லதா மங்கேஷ்கர்
இந்திய பாடகர் / From Wikipedia, the free encyclopedia
லதா மங்கேசுக்கர் (Lata Mangeshkar; 28 செப்டம்பர் 1929 – 6 பெப்ரவரி 2022) இந்தியப் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.[7][8] எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய இசைத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பானது இந்தியாவின் இசைக்குயில், மிலேனியத்தின் குரல், இன்னிசை இராணி போன்ற கௌரவப் பட்டங்களைப் பெற்றது.[9]
பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் Lata Mangeshkar | |
---|---|
2010 இல் மங்கேசுக்கர் | |
பிறப்பு | ஹேமா மங்கேசுக்கர் (1929-09-28)28 செப்டம்பர் 1929 இந்தோர், இந்தூர் முகமை, இந்தியா (இன்றைய மத்தியப் பிரதேசம்) |
இறப்பு | 6 பெப்ரவரி 2022(2022-02-06) (அகவை 92)[1] பிரீச் கான்டி மருத்துவமனை, மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | மெலடி ராணி இந்தியாவின் இசைக்குயில் |
பணி | பின்னணிப் பாடகி, தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1942–2022 |
விருதுகள் |
|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 22 நவம்பர் 1999 – 21 நவம்பர் 2005 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | சுயேச்சை[2] |
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) | தனிப்பாடல்கள் |
கையொப்பம் |
குறிப்பாக இந்தி, வங்காள, மராத்தி மொழிகள் உட்பட முப்பத்தாறுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் சில வெளிநாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.[9] இவர் தனது வாழ்நாள் முழுவதும் பல பாராட்டுகளையும் மரியாதைகளையும் பெற்றார். 1987-இல் இந்திய அரசால் தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டில், நாட்டிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்தியாவின் உயரிய குடிமக்களுக்கான விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது, இது எம். எஸ். சுப்புலட்சுமிக்குப் பிறகு இந்தப் பெருமையைப் பெறும் இரண்டாவது பெண் பாடகி ஆவார்.[10] 2007 ஆம் ஆண்டில், பிரான்ஸ் தனது உயரிய குடிமக்கள் விருதான, செவாலியே விருதை அவருக்கு வழங்கியது.[11]
லதா மங்கேசுக்கர் மூன்று தேசியத் திரைப்பட விருதுகள், 15 வங்காளத் திரைப்படப் பத்திரிகையாளர் சங்க விருதுகள், நான்கு பிலிம்பேர் விருதுகள், இரண்டு பிலிம்பேர் சிறப்பு விருதுகள், பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1974 இல், இலண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் மண்டபத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.