மலேசியப் பொதுத் தேர்தல், 2013
From Wikipedia, the free encyclopedia
2013 மலேசியப் பொதுத்தேர்தல் 2013 மே 5 இல் நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[2][3] மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி சரவாக் மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.[4][5]
![]() | |||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||
தெரிவான உறுப்பினர்கள் → | |||||||||||||||||||||||||||||||||||||
மலேசியாவின் நாடாளுமன்றத்துக்கான அனைத்து 222 இடங்களுக்கும், சரவாக் தவிர்ந்த ஏனைய 12 மாநில சட்டமன்றங்களுக்கான அனைத்து 505 இடங்களுக்கும் அதிகபட்சமாக 112 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||
|
மலேசிய அரசியலமைப்பின் படி, ஒரு நாடாளுமன்றத்தின் காலம் ஆகக்கூடியது ஐந்து ஆண்டுகளாகும். அதன் பின்னர் மலேசியப் பிரதமரின் பரிந்துரையின் பேரில் மன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாளைக் குறிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடுவார். மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல் ஆளும் தேசிய முன்னணி, எதிர்க் கட்சியான பாக்காத்தான் ராக்யாட் என்னும் மக்கள் கூட்டணி ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு சவால் மிக்க போட்டியாக இருந்தது.[6]
மலேசிய அரசியல் வரலாற்றில் பாரிசான் நேசனல் எனும் தேசிய முன்னணிக் கூட்டணியே, ஆளும் கட்சியாக ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்று வந்துள்ளது. பாரிசான் நேசனல் 14 அரசியல் கட்சிகளின் கூட்டு அமைப்பைக் கொண்ட ஒரு கூட்டணியாகும். இதன் தலையாய பங்காளிக் கட்சிகளாக அம்னோ, மலேசிய சீனர் சங்கம் எனும் ம.சீ.ச, மலேசிய இந்தியர் காங்கிரஸ் (ம.இ.கா) கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மக்கள் கூட்டணியில் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்), மக்கள் நீதிக் கட்சி (பி.கே.ஆர்), ஜனநாயக செயல் கட்சி (ஜ.செ.க) ஆகியவை உறுப்புக் கட்சிகளாக உள்ளன.
அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.