![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/09/Pandit_Bhimsen_Joshi_%2528cropped%2529.jpg/640px-Pandit_Bhimsen_Joshi_%2528cropped%2529.jpg&w=640&q=50)
பீம்சேன் சோசி
இந்தியப் பாடகர் / From Wikipedia, the free encyclopedia
பீம்சேன் சோசி (Bhimsen Joshi), பெப்ரவரி 4, 1922 - சனவரி 24, 2011) பண்டிட் என்ற மரியாதைக்குரிய முன்னொட்டால் அறியப்பட்ட இவர் கருநாடகாவைச் சேர்ந்த இந்துத்தானி இசை குரலிசைப் பாடகர். இவர், காயல் வகைப் பாடல்களுக்காகவும், பக்தி இசையின் ( பஜனைகள் மற்றும் அபங்கங்கள் ) பிரபலமான இசைப்பாடல்களுக்காகவும் அறியப்படுகிறார். மேலும் 1964 மற்றும் 1982 க்கு இடையில் ஜோஷி ஆப்கானித்தான், இத்தாலி, பிரான்சு, கனடா மற்றும் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்தார். நியூயார்க்கு நகரில் சுவரொட்டிகள் மூலம் கச்சேரிகள் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தியாவின் முதல் இசைக்கலைஞர் இவரே.[1][2] சோசி தனது குருவான சவாய் கந்தர்வனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் சவாய் கந்தர்வ இசை விழாவை ஏற்பாடு செய்வதில் முக்கிய பங்காற்றினார்[3]
பண்டிதர் பீம்சேன் சோசி | |
---|---|
![]() 1991இல் சோசி | |
பிறப்பு | பீம்சேன் குருராச் சோசி (1922-02-04)4 பெப்ரவரி 1922 உரோன் கதக் மாவட்டம், கருநாடகம், இந்தியா |
இறப்பு | 24 சனவரி 2011(2011-01-24) (அகவை 88) புனே, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | இந்துஸ்தானி இசைப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1941–2000 |
பெற்றோர் | குருராச்ராவ் சோசி (தந்தை) இரமா பாயி (தாயார்) |
விருதுகள் |
|
இசை வாழ்க்கை | |
இசை வடிவங்கள் |
|
இசைக்கருவி(கள்) |
|
1998 ஆம் ஆண்டில், இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான இந்தியாவின் தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் என்ற கௌரவத்தை இவருக்கு வழங்கியது.[4]
இந்திய அரசு இவருக்கு 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய குடியியல் விருதான பாரத் ரத்னா விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.[5]