சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்
From Wikipedia, the free encyclopedia
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் (Sangeet Natak Akademi Fellowship), மேலும், சங்கீத நாடக அகாதமி ரத்ன சதஸ்யஎன்ற மாண்புமிகு உறுப்பினர் பதவி சிறப்பான இந்திய நிகழ்த்து கலைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு நேரத்திலும் முப்பது நபர்கள் இருக்குமாறு இந்த உறுப்பினர் பதவிகள் சங்கீத நாடக அகாதமியால் அளிக்கப்படுகின்றன.[1] இந்திய அரசு|இந்திய அரசால் ஓர் நிகழ்த்து கலைக் கலைஞருக்கு வழங்கப்படும் உயரிய பெருமை இதுவேயாகும்.
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
பகுப்பு | நிகழ்த்து கலைகள் (தனிநபர்) | |
நிறுவியது | 1954 | |
முதலில் வழங்கப்பட்டது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2008 | |
வழங்கப்பட்டது | சங்கீத நாடக அகாதமி | |
விவரம் | இந்தியாவில் நிகழ்த்து கலைக்கான விருது | |
முதல் வெற்றியாளர்(கள்) | காரைக்குடி சாம்பசிவ ஐயர், அரியக்குடி இராமானுச ஐயங்கார், அல்லாவுதீன் கான், அஃபீசு கான், மற்றும் பிரித்விராஜ் கபூர். | |
விருது தரவரிசை | ||
← சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் → சங்கீத நாடக அகாதமி விருது |
மூடு
1954ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அங்கத்துவம் முதலில் கருநாடக இசைக் கலைஞர்களான காரைக்குடி சாம்பசிவ ஐயர், அரியக்குடி இராமானுசன் மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்கள் அலாவுதீன் கான், அஃபீசு அலி கான்[2] மற்றும் திரைப்பட, மேடைநாடக நடிகர் பிரித்திவிராசு கபூர்.[3]ஆகியோருக்கு வழங்கப்பட்டது.