பிரித்திவிராசு சவான்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பிரித்திவிராசு சவான் (Prithviraj Chavan) (மராத்தி:पृथ्वीराज चव्हाण}}) (பிறப்பு 17 மார்ச் 1946) மகாராட்டிர மாநில காங்கிரசு கட்சி அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் சார் அமைச்சராகப் பணியாற்றியவர்.11 நவம்பர் 2010 அன்று மகாராட்டிர மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார்[1].நடப்பு முதல்வர் அசோக் சவான் ஆதர்ச வீட்டு வாரிய ஊழல் புகார்களை அடுத்து பதவி விலகியதை அடுத்து காங்கிரசுத் தலைமை இவரை தேர்வு செய்தது.
பிரித்திவிவிராசு சவான் पृथ्वीराज चव्हाण | |
---|---|
16வது மகாராட்டிர முதலமைச்சர் | |
பதவியில் 11 நவம்பர் 2010 - 26 செப்டம்பர் 2014 | |
முன்னையவர் | அசோக் சவான் |
பின்னவர் | தேவேந்திர பத்னாவிசு |
தொகுதி | கராத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 மார்ச்சு 1946 (1946-03-17) (அகவை 78) இந்தூர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சத்வசீலா |
வாழிடம் | சதாரா |
இலத்திரனியல் பொறியாளராகிய இவர் பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாடு வெற்றியடைய பலநாடுகளுக்கும் பிரதமரின் சார்பாக பயணித்து இந்திய நிலையை விளக்கி அணுவாற்றல் வழங்குவோர் குழுமத்தின் மற்றும் பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் ஒப்புதல்களைப் பெறுவதில் பெரும் பங்காற்றினார்.