பார்வதி
இந்துக்கடவுள் / From Wikipedia, the free encyclopedia
பார்வதி அல்லது உமையவள் அல்லது மலைமகள் அல்லது இகன்மகள் என்பவர் இந்து சமயத்தில் கூறப்படும் பெண் தெய்வமும் சிவபெருமானின் துணைவியும் ஆவார்.[2] இவர் வளம், அன்பு, பக்தி, பெருவலிமை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார்.[3][4][5] சக்தியின் பொதுவான வடிவமாக பார்வதியைக் கொள்வதே மரபாகும். இந்தியத் தொன்மங்களில் ஆயிரத்துக்கும் மேலான வடிவங்களும், அம்சங்களும் பெயர்களும் புராணக்கதைகளும் பார்வதிக்கு உண்டு. லட்சுமி, சரசுவதி ஆகியோருடன் முத்தேவியர்களில் ஒருவராகப் பார்வதி இருக்கிறார்.[6] மலையரசனான இமவான் மற்றும் மேனை ஆகியோரின் மகளாகப் பார்வதி பிறந்தார்.[7] இவர் கங்கைக்கு இளையவர் ஆவார்.[8] முருகன், பிள்ளையார் ஆகியோரின் தாயும் இவரே. பார்வதியை விட்டுணுவின் தங்கையாகவும் கருதுவது உண்டு.[9]
பார்வதி | |
---|---|
அதிபதி | சிவசக்தி |
வேறு பெயர்கள் | அகசை, அகிலாண்டநாயகி, அங்கணி, அத்திநந்தனி, அந்திரி, அநந்தவிபவை, அபிராமி, அம்பா, அம்பாள், அம்பிகை, அம்பை, அமிர்தை, அற்புதை, அறச்செல்வி, அனந்தவிபவை, அனுபவை, ஆரணங்கு, ஆரணி, ஆரியை, ஆவரணி, ஆனந்தி, இகன்மகள், இந்திராட்சி, இமயவதி, இமயவல்லி, இமாசலை, இலலிதை, ஈசுவரி, ஈசை, உடையாள், உமா, உமாதேவி, உமை, உமையவள், உமையாள், உலகமீன்றாள், ஏகை, ஐமவதி, கங்காளி, கபாலி, கவுமாரி, கன்னி, காத்தியாயனி, காமக்கோட்டி, காமாட்சி, கிரிசை, கிரிஜா, கோமதி, கோரி, சகமீன்றவள், சகலமங்கலை, சங்கரி, சடாட்சரி, சடாதரி, சடாதாரி, சதி, சம்பவை, சவுந்தரி, சாத்தவி, சாம்பவி, சாமளை, சித்தை, சிவதூதி, சிவப்பிரியை, சிவவல்லபை, சிற்பரை, சின்மயை, சுவாகை, சைலபுத்திரி தேவி, ஞானவல்லியம், திகம்பரி, திரிபுரசுந்தரி, திரிலோசனி, துர்க்கை, துருவை, நகநந்தினி, நாயகி, நாரி, நிர்க்குணி, நிரஞ்சனி, நிரந்தரி, நிருமலி, நீலமேனியள், பகவதி, பஞ்சமி, பரமகலை, பரமேசுவரி, பரிபூரணி, பருப்பதி, பருவதவர்த்தனி, பருவதி, பரைச்சி, பவதி, பவானி, பார்க்கவி, பார்ப்பதி, பிங்கலை, பிரதானபுருடேச்சுரி, பிரதானை, பிரமவிஞ்சை, புங்கவி, புண்ணியமுதல்வி, புராணை, புருடமோகினி, புவனை, பூதநாயகி, பைரவி, பொன்மலைவல்லி, மகதி, மகாதேவி, மகாமாயை, மகேசுவரி, மங்கலை, மதங்கி, மயேசுவரி, மரகதவல்லி, மலைமகள், மலைவளர்காதலி, மனோன்மணி, மாகேச்சுவரி, மாதங்கி, மாதா, மாதேவி, மாபெலை, மாமாயை, மாயேசுரி, மாயை, மிருடானி, மிருதி, முக்கண்ணி, மேனைமகள், யாமளை, லோபை, வரதை, வரவண்ணினி, வல்லபி, வாக்கியை, வாகீசுவரி, வாமி, விந்தை, விமலை, வேதநாயகி, வேதமுதல்வி, ஸ்கந்தமாதா [1] |
தேவநாகரி | पार्वती |
சமசுகிருதம் | Pārvatī |
தமிழ் எழுத்து முறை | உமையவள் |
வகை | முத்தேவியர், ஆதி பராசக்தி, தேவி |
இடம் | கயிலை மலை |
மந்திரம் | ஓம் சக்தி பராசக்தி |
ஆயுதம் | சூலம், பாசாங்குசம், |
துணை | சிவன் |
சகோதரன்/சகோதரி | கங்கா தேவி, விஷ்ணு |
குழந்தைகள் | பிள்ளையார், முருகன்,அசோக சுந்தரி |
ஈசனுடன் இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றான சைவநெறியின் மையத்தெய்வமாக பார்வதி விளங்குகிறார். உயிர்களின் சிவகதிக்கு உதவுகின்ற சுத்தமாயையும், ஈசனின் சக்தியும்[10] அவளே என்பது சைவர்களின் நம்பிக்கை ஆகும். இந்தியாவில் மட்டுமின்றி, தெற்காசியா, தென்கிழக்காசியா முதலான பல இடங்களிலும் பார்வதியின் சிற்பங்களும், நம்பிக்கைக்களும், நிறையவே காணப்படுகின்றன.[11][12]