![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/08/Ganga_Kalighat_1875.jpg/640px-Ganga_Kalighat_1875.jpg&w=640&q=50)
கங்கை (இந்து மதம்)
From Wikipedia, the free encyclopedia
கங்கா தேவி (சமசுகிருதம்: गङ्गा, இந்தி: गंगा Gaṅgā, பர்மியம்: ဂင်္ဂါ, ɡɪ́ɴɡà என்பவர் பர்வதராஜன் - மைனாகுமாரி தம்பதியரின் மகளும், சிவனின் மனைவியருள் ஒருத்தியும்[1] ஆவார். இவருடைய சகோதரியான பார்வதி சிவனை மணந்தபின்பு, பகீரதனின் வேண்டுதலால் தேவலாகத்திலிருந்து சிவனின் சடாமுடியை அடைந்தார்.
கங்கை | |
---|---|
![]() கங்கை தனது கெளுத்தி மீன் வாகனத்துடன் | |
தேவநாகரி | गंगा |
சமசுகிருதம் | Ganga |
வகை | தேவி, நதி |
இடம் | பிரம்மலோகம் அல்லது பிரம்மபுரம், இமயமலை மற்றும் புவி |
மந்திரம் | ஓம் கங்கா தேவி நமஹ |
துணை | திருமால்- திருமால் பாதங்களில் கங்கை பிறப்பதாக நம்பிக்கை சிவன் –கங்கையைத் தாங்கியவராக சந்தனு –மகாபாரதத்தில் கங்கையின் கணவன் |
குழந்தைகள் | வீடுமர்(மகாபாரதத்தில்) , முருகன்(ஒளி வடிவில் முருகனை ஏந்திச்சென்றதால்), வீரபத்திரன் (சிவனின் சடையில் கங்கை தங்கிய பிறகு அச்சடையிலிருந்து தோன்றியவர்) |
இந்து மதத்தில், கங்கை ஆறு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு இந்துக்களால் கடவுளாகப் போற்றப்படுகிறது. கங்கையில் குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் விலகிவிடும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வரும் இந்துக்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனால் இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாகும். ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், காசி போன்ற முக்கியமான இந்துத் தலங்கள் கங்கையாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.
இந்து சமய நூல்களின்படி, கங்கைக்கு எண்ணற்ற குணநலன்களும், பல கதைகளும் வழங்கப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணானவை. கங்கையைச் சிவபெருமானின் மனைவி, முருகனின் வளர்ப்புத் தாயென சைவ சமயம் கூறுகிறது.இதிகாசமான மகாபாரதம் கங்கையைப் பீஷ்மரின் தாயென கூறுகிறது.