![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/13/%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF_%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%25BE.jpg/640px-%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AE%25A9%25E0%25AF%258D_%25E0%25AE%25B5%25E0%25AF%2580%25E0%25AE%25A4%25E0%25AE%25BF_%25E0%25AE%2589%25E0%25AE%25B2%25E0%25AE%25BE.jpg&w=640&q=50)
முருகன்
தமிழ்கடவுள், இந்துமத கடவுள்,சைவக்கடவுள் / From Wikipedia, the free encyclopedia
முருகன் அல்லது கார்த்திகேயன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார். சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாக போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கௌமாரம் முருகன் வழிபாட்டினைச் குறிக்கும்.
முருகன் | |
---|---|
![]() வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
அதிபதி | தமிழ், சைவ, அன்பு, போர் |
வேறு பெயர்கள் | ஆறுமுகன், குமரன், குகன், சரவணன், வேலன், சுவாமிநாதன், கந்தன், கார்த்திகேயன், சண்முகன், தண்டாயுதபாணி, கதிர்காமன், சுப்பிரமணியன், மயில்வாகனன், சேயோன் |
தேவநாகரி | मुरुगन, कार्तिकेय,स्कंध |
தமிழ் எழுத்து முறை | முருகா, கார்த்திகேயா, கந்தா |
வகை | தேவர், சித்தர் |
இடம் | அறுபடைவீடுகள் கைலாயம் |
கிரகம் | செவ்வாய் |
மந்திரம் | ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா |
ஆயுதம் | வேல் |
போர்கள் | சூரசம்மாரம் |
துணை | வள்ளி தெய்வானை |
பெற்றோர்கள் | சிவன் பார்வதி |
சகோதரன்/சகோதரி | விநாயகர் |
வாகனம் | மயில் |
நூல்கள் | கந்த புராணம் திருப்புகழ் |
சமயம் | சைவம் |
விழாக்கள் | தைப்பூசம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, அக்னி நட்சத்திரம், வைகாசி விசாகம், கந்த சட்டி, கார்த்திகை விளக்கீடு |
சிவபெருமான் தனது நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாகக் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன. தென்னிந்திய முறைப்படி, இவர் கணங்களின் அதிபதியான கணபதிக்குத் தம்பியாகக் கருதப்படுகிறார் மற்றும் முருகனுக்கு தெய்வானை மற்றும் வள்ளி மனைவிகளாவர்.
முருகன் எப்போதும் இளமையுடன் இருக்கும் கடவுளாக, மயில் சவாரி செய்யும் மற்றும் சில சமயங்களில் சேவல் கொடி கொண்டும் இருப்பார். அவர் தனது தாயார் பார்வதியால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வேல் எனப்படும் ஈட்டி ஆயுதம் பயன்படுத்துகிறார். பெரும்பாலான சின்னங்கள் அவரை ஒரே ஒரு தலையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, சிலவற்றில் ஆறு தலைகள் உள்ளன, அவை அவரது பிறப்பைச் சுற்றியுள்ள புராணத்தைப் பிரதிபலிக்கின்றன.