![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Court_ladies_pounding_silk_from_a_painting_%2528%25E6%258D%25A3%25E7%25BB%2583%25E5%259B%25BE%2529_by_Emperor_Huizong.jpg/640px-Court_ladies_pounding_silk_from_a_painting_%2528%25E6%258D%25A3%25E7%25BB%2583%25E5%259B%25BE%2529_by_Emperor_Huizong.jpg&w=640&q=50)
பட்டுப்புழு வளர்ப்பு
குறுகிய கால பண வரவு / From Wikipedia, the free encyclopedia
பட்டுப்புழு வளர்ப்பு அல்லது பட்டுவளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) என்பது பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும். பட்டு தயாரிப்பிற்கு பல சிற்றினப் புழுக்கள் இருந்தாலும் கம்பளிப்புழு இனமான பாம்பிக்ஸ் மோரி (Bombyx mori) பெரிதும் பயன்படுகிறது. புதிய கற்காலம் தொட்டே சீனாவில் முதன்முதலாகப் பட்டு தயாரிப்பு செய்தாகக் கருதப்படுகிறது. பட்டு வளர்ப்பு என்பது பிரேசில், சீனம், பிரான்சு, இந்தியா, இத்தாலி, யப்பான், கொரியா, மற்றும் உருசியா உள்ளிட்ட நாடுகளில் முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலக பட்டுத் தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Court_ladies_pounding_silk_from_a_painting_%28%E6%8D%A3%E7%BB%83%E5%9B%BE%29_by_Emperor_Huizong.jpg/640px-Court_ladies_pounding_silk_from_a_painting_%28%E6%8D%A3%E7%BB%83%E5%9B%BE%29_by_Emperor_Huizong.jpg)
எந்த உயிரினத்தையும் வதைக்காமல் அகிம்சை வழியில் கூட்டுப்புழுக்களை வேக வைக்காமல் பட்டெடுத்து அகிம்சைப் பட்டு உற்பத்தியைச் செய்ய காந்தி வலியுறுத்தினார்.[1][2][3] பல சமூக அமைப்புகளும் கூட்டுப்புழுவை வேகவைப்பதை எதிர்க்கின்றனர். 21ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் விலங்குகளை நன்முறையில் நடத்த விழைகின்ற மக்கள் என்கிற அமைப்பு பட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.[4]