![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0f/Silkworms3000px.jpg/640px-Silkworms3000px.jpg&w=640&q=50)
பட்டுப்புழு
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
பட்டுப்புழு என்பது வேளாண்மை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பட்டுப்பூச்சியின் (Bombyx mori) குடம்பிப்புழு நிலையாகும். பட்டு நூலை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதனால், இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பூச்சியினமாக உள்ளது. துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மரம்) என்றழைக்கப்படும் ஒரு தாவரத்தின் இலைகளே இதன் மிக முக்கியமான உணவாக இருக்கிறது. பட்டுப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியானது 6-8 வாரங்களில் முடிவடைந்துவிடும். இப்பூச்சியை அந்துப்பூச்சி என்றும் அழைப்பார்கள்.
வேளாண்மைக்குட்படுத்தப்பட்ட பட்டுப் பூச்சி | |
---|---|
![]() | |
ஐந்தாம்நிலை பட்டுப்புழு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | B. mori |
இருசொற் பெயரீடு | |
Bombyx mori L, 1758 | |
வேறு பெயர்கள் | |
Silkworm |
குறிப்பிட்ட இந்த இனமானது வட இந்தியா, வட சீனா, கிழக்கு உருசியா, யப்பான் போன்ற நாடுகளில் வன இனமாகக் காணப்பட்ட பட்டுப் பூச்சி இனத்தை (Bombyx mandarina) வேளாண்மை வளர்ப்புக்கு தொடர்ந்து உட்படுத்தி வந்தபோது உருவாகிய இனமாகும். அனேகமாக இது சீன வகைப் பட்டுப்பூச்சியிருந்து உருவான வேளாண்மைக்குட்பட்ட இனமாகும்[1]. இது பல்லாண்டு காலமாக பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பட்டுப்புழு வளர்ப்பு நடை முறையிலுள்ளது. இந்த இனமானது தனது இனப்பெருக்கத்திற்கு, மனித வளர்ப்பிலேயே முற்று முழுதாய் தங்கியிருப்பதுடன், தாமாக காட்டு இனமாக இருக்க முடியாத நிலையிலுள்ளது.