![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Kuvalayavaswa_slayed_th_Danavas.jpg/640px-Kuvalayavaswa_slayed_th_Danavas.jpg&w=640&q=50)
தானவர்கள்
From Wikipedia, the free encyclopedia
தானவர்கள் (Danavas) (சமஸ்கிருதம்: दानव) பிரஜாபதி தட்சனின் மகள் தனுவிற்கும், முனிவர் காசியபருக்கும் பிறந்த தானவர்கள், அசுர குலத்தவர்களில் ஒரு பிரிவினர் என பண்டைய பரத கண்டத்தின் புராணங்கள் கூறுகிறது.[1][2][3] தானவர்கள் பற்பல உருவங்களை எடுக்கக் கூடிய அட்டமா சித்திகளைப் பெற்ற மாயா அசுரர்கள் ஆவார்.[4]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Kuvalayavaswa_slayed_th_Danavas.jpg/640px-Kuvalayavaswa_slayed_th_Danavas.jpg)
தேவர்கள் போல் சாகா வரம் பெற தானவர்கள் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் இருக்கையில், இந்திரன் அரம்பையர்களை அனுப்பி, தானவர்களின் தவத்தை கலைத்து விடுவார்.
தேவர்களின் கடும் எதிரிகளான தானவர்களால் தேவர்களுக்கு ஆபத்து நேரும் காலங்களில், தேவர்களின் நண்பரான திருமால், தானவர்களை போரில் வென்று தேவர்களைக் காப்பார்.[5]