சார்லமேன்
From Wikipedia, the free encyclopedia
சார்லமேன் (Charlemagne - 742 – 28 ஜனவரி 814) பிராங்குகளின் அரசராவார். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், திருத்தந்தை மூன்றாம் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது. இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
பெரிய சார்லமேன் | |
---|---|
KAROLVS IMP AVG (Karolus Imperator ஆகஸ்ட்us) என்ற பொறிப்புடன் கூடிய சார்லமேன் காலத்து நாணயம் | |
புனித உரோமை பேரரசர் | |
ஆட்சிக்காலம் | டிசம்பர் 25, 800 – ஜனவரி 28, 814 |
முடிசூட்டுதல் | டிசம்பர் 25, 800 பழைய புனித பேதுரு பேராலயம், உரோமை நகரம் |
முன்னையவர் | பதவி உறுவாக்கப்பட்டது |
பின்னையவர் | முதலாம் லூயிஸ் |
இலம்பார்டியர்களின் அரசர் | |
ஆட்சிக்காலம் | ஜூலை 10, 774 – ஜனவரி 28, 814 |
முடிசூட்டுதல் | ஜூலை 10, 774 பவியா |
முன்னையவர் | தெசித்தேரியசு |
பின்னையவர் | முதலாம் லூயிஸ் |
பிராங்சின் அரசன் | |
ஆட்சிக்காலம் | அக்டோபர் 9, 768 – ஜனவரி 28, 814 |
முடிசூட்டுதல் | அக்டோபர் 9, 768 நோயோன் |
முன்னையவர் | பேபின் |
பின்னையவர் | முதலாம் லூயிஸ் |
பிறப்பு | 2 ஏப்ரல் 742 Liège, Frankish Kingdom |
இறப்பு | 28 சனவரி 814(814-01-28) (அகவை 71) ஆஃகன், புனித உரோமைப் பேரரசு |
புதைத்த இடம் | ஆச்சன் பேராலயம் |
மரபு | கரோலிங்கயர்கள் வம்சம் |
தந்தை | பேபின் |
தாய் | பேராதா |
மதம் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் சார்லஸ் அகஸ்டுஸ் சார்லமேன் | |
---|---|
அரு. சார்லஸ் அகஸ்டுஸின் திருப்பண்டம் | |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை (செருமனி மற்றும் பிரான்சு) |
அருளாளர் பட்டம் | 814, ஆஃகன் by மறைமாநில ஆயரால், பின்னாட்களில் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்டினால் இது உறுதிசெய்யப்பட்டது.[1] |
புனிதர் பட்டம் | 1166 by எதிர்-திருத்தந்தை மூன்றாம் பாஸ்கால்[1] (இவர் எதிர்-திருத்தந்தை, ஆதலால் சார்லமேன் புனிதர் என ஏற்கப்படுவதில்லை) |
முக்கிய திருத்தலங்கள் | ஆச்சன் பேராலயம் |
திருவிழா | ஜனவரி 28 (ஆஃகன் and ஆசுநோபருக்கு |
சித்தரிக்கப்படும் வகை | லில்லி மலர் |
பாதுகாவல் | காதலர்கள், பள்ளி குழந்தைகள், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் மன்னர்கள், சிலுவைப் போர்கள் |
இவர், குட்டைப் பிப்பின் என அழைக்கப்பட்ட பிராங்குகளின் அரசனுக்கும், லாவோனின் பெட்ராடா என்னும் அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தைக்குப் பின் தனது உடன்பிறந்தானான முதலாம் கார்லோமன்னுடன் கூட்டாக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் சார்லமேனுக்கும், கார்லோமனுக்கும் இடையில் போர் ஏற்படுமளவுக்குப் பிணக்கு ஏற்பட்டதாயினும், 771ல் கார்லோமன் இறந்துவிட்டதனால் போர் தவிர்க்கப்பட்டது. சார்லமேன் கத்தோலிக்கத் திருச்சபை குறித்துத் தனது தந்தையின் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்ததுடன் அதன் காவலனாகவும் இருந்தார். இதற்காக இத்தாலியில் ஆட்சியிலிருந்த லொம்பார்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றியதுடன், ஸ்பெயினில் இருந்து இவரது ஆட்சிக்குத் தொல்லை கொடுத்துவந்த சரசென்களுடனும் போராடினார். இப் போர்களில் ஒன்றிலேயே இவர் தனது வாழ்நாளின் பெரும் தோல்விகளுள் ஒன்றைச் சந்தித்தார். ரான்செஸ்வயஸ் சண்டை (Battle of Roncesvalles) என அழைக்கப்பட்ட இப் போர் ரோலண்டின் பாடலில்]] நினைவு கூரப்பட்டுள்ளது. இவர் கிழக்குப் பகுதிகளிலிருந்த மக்களுக்கு, சிறப்பாக சக்சன்களுக்கு எதிராகவும் படையெடுப்புக்களை மேற்கொண்டு, நீண்டகாலப் போருக்குப் பின் அவர்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தார். கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியதன் மூலம் அவர்களைத் தனது ஆட்சிக்குள் ஒன்றிணைத்தார்.
இன்று இவர் பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் முடியாட்சிகளின் தந்தையாக மட்டுமன்றி, ஐரோப்பாவின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ரோமர்களுக்குப் பின்னர் இவரது பேரரசே பெரும்பாலான மேற்கு ஐரோப்பியப் பகுதிகளை ஒன்றிணைத்தது. அத்துடன் கரோலிங்கன் மறுமலர்ச்சி மூலம் ஐரோப்பாவுக்கு ஒரு பொது அடையாளம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது.