குதுப் ஷாஹி வம்சம்
தென்னிந்தியாவில் கோல்கொண்டா சுல்தானகத்தை ஆட்சி செய்த ஒரு வம்சம் / From Wikipedia, the free encyclopedia
குதுப் ஷாஹி வம்சம் (Qutb Shahi dynasty) என்பது பொ.ச. 1518 முதல் 1687 வரை தென்னிந்தியாவில் கோல்கொண்டா சுல்தானகத்தை ஆட்சி செய்த ஒரு வம்சமாகும். இவர்கள் துர்கோமன் முஸ்லிம் பழங்குடியினரான காரா கொயுன்லுவைச் சேர்ந்த காரா யூசுப்பின் வழித்தோன்றல்கள் ஆவர். பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், "குதுப் ஷாஹி" வம்சம் கி.பி 1518 இல் குலி குதுப் முல்க் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் "சுல்தான்" என்ற பட்டத்தையும் வைத்துக் கொண்டார். 1636 ஆம் ஆண்டில், ஷாஜகான் இவர்களை முகலாய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தினார். முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றி ஆக்கிரமித்தபோது, 1687ஆம் ஆண்டில் அதன் ஏழாவது சுல்தான் அபுல் ஹசன் குதுப் ஷா ஆட்சியின் போது வம்சம் முடிவுக்கு வந்தது. [5] [6] இந்த இராச்சியம் நவீன கால மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்காணாவின் பகுதிகளிலிருந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. [7] கோல்கொண்டா சுல்தானகம் பிஜப்பூர் சுல்தானகத்துடனும் தக்காண சுல்தானகங்களுடனும் தொடர்ந்து மோதலில் இருந்தது. [8]
கோல்கொண்டா சுல்தானகம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1518–1687 | |||||||||
குதுப் ஷாஹிக்களின் கொடி | |||||||||
தலைநகரம் | கோல்கொண்டா (1519-1591) ஐதராபாத்து (1591-1687) | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி (அலுவல்)[3] தெலுங்கு[4] தக்காணிய உருது | ||||||||
சமயம் | சியா இசுலாம் | ||||||||
வரலாறு | |||||||||
• தொடக்கம் | 1518 | ||||||||
• முடிவு | 1687 | ||||||||
நாணயம் | மொஹர் | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
குதுப் ஷாஹிகள் தொடர்ச்சியான சியா கலாச்சாரத்தின் சிறந்த புரவலர்களாக இருந்தனர். [9] இறுதியில் இது தக்காணத்தின் பிராந்திய கலாச்சாரத்தையும் (தெலுங்கு கலாச்சாரம், மொழி மற்றும் உருது மொழியில் புதிதாக உருவாக்கப்பட்ட தக்காணிய பேச்சுவழக்கு) ஏற்றுக்கொண்டது. தெலுங்கு அவர்களின் தாய்மொழி இல்லை என்றாலும், கோல்கொண்டா ஆட்சியாளர்கள் தெலுங்கைப் பேசினர். எழுதினர். [10] மேலும், தெலுங்கை மிகவும் பிரத்தியேகமாக ஆதரித்தனர். இதனால் அவர்கள் "தெலுங்கு சுல்தான்கள்" என்று அழைக்கப்பட்டனர். [11] குதுப் ஷாஹிகள் மதச்சார்பற்ற ஆட்சிக்கு பெயர் பெற்றவர்கள். [12]