தில்லியில் உள்ள கட்டிடம் From Wikipedia, the free encyclopedia
குதுப் மினார் வளாகம் (Qutb Minar complex) என்பது இந்தியாவில் தில்லியில் உள்ள மெக்ராலியில் உள்ள தில்லி சுல்தானகத்தின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் ஆகும். இந்த வளாகத்தில் உள்ள குதுப் மினார் "வெற்றி கோபுரம்" என்றும், சூபி மதத்துறவி குவாஜா குத்புதீன் பக்தியார் காக்கியின் பெயரிடப்பட்டது. இதன் கட்டமைப்பு குதுப்-உத்-தின் ஐபக் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் அவர் மம்லூக்கிய வம்சத்தின் (குலாம் வான்ஷ்) டெல்லியின் முதல் சுல்தானானார். கட்டுமானத்தை அவரது வாரிசான சம்சுத்தின் இல்த்துமிசு (அல்தமாஷ் எனவும் அறியப்படுகிறார்), இறுதியாக கி.பி 1368 இல் துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த (1320-1412) டெல்லியின் சுல்தானான பிரோசு சா துக்ளக் அவர்களால் நிறைவு செய்யப்பட்டது. குபத்-உல்-இஸ்லாம் மசூதி பின்னர் குவாதத்-உல் இஸ்லாத்தில் சிதைக்கப்பட்டது. இது குதுப் மினாருக்கு அடுத்ததாக நிற்கிறது.[1][2][3]
துக்ளக்குகள், அலாவுதீன் கில்சி மற்றும் பிரித்தானியர்கள் உட்பட பல ஆட்சியாளர்கள் இந்த வளாகத்தில் கட்டமைப்புகளைச் சேர்த்தனர்.[4] குதுப் மினார் மற்றும் குவ்வத் உல்-இஸ்லாம் மசூதி தவிர, இந்த வளாகத்தில் உள்ள மற்ற கட்டுமானங்களில் அலாய் தர்வாசா வாயில், அலாய் மினார் மற்றும் இரும்புத் தூண் ஆகியவை அடங்கும் . குவ்வத் உல்-இஸ்லாம் மசூதி 27 பழைய சமண கோவில்களை அழித்த பின்னர் கட்டப்பட்டது. மேலும், இந்த வளாகத்திற்குள் இல்துமிசு, அலாவுதீன் கில்சி மற்றும் இமாம் ஜமீன் ஆகியோரின் கல்லறைகளும் உள்ளன.[1]
இன்று, அருகிலுள்ள பகுதி பால்பனின் கல்லறை உட்பட பல பழைய நினைவுச்சின்னங்களுடன் பரவியுள்ளது. இது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் (ஏ.எஸ்.ஐ) மெக்ராலி தொல்பொருள் பூங்காவாக உருவாக்கப்பட்டது. கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை இந்தப் பூங்காவில் சுமார் 40 நினைவுச்சின்னங்களை மீட்டெடுத்துள்ளது.[5] நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் வருடாந்திர 'குதுப் திருவிழா'வின் இடமாகவும் இது உள்ளது. இதில் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் மூன்று நாட்களுக்கு மேல் நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்கள். 2006 ஆம் ஆண்டில் 3.9 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த குதுப் மினார் வளாகம், தாஜ்மஹால் விட அந்த ஆண்டில் இந்தியாவின் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[6]
அலாய் தர்வாசா குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியின் தெற்குப் பக்கத்திலிருக்கும் ஒரு முக்கிய நுழைவாயில் ஆகும் .[7] கி.பி 1311 இல் தில்லியின் இரண்டாவது கில்சி சுல்தான் அலாவுதீன் கில்சி அவர்களால் கட்டப்பட்டது. அவர் கிழக்குப் பக்கத்திலுள்ள தூண்களுக்கு ஒரு சபையையும் சேர்த்தார். குவிமாட நுழைவாயில் சிவப்பு மணற்கல் மற்றும் பொறிக்கப்பட்ட வெள்ளை பளிங்கு அலங்காரங்கள், நாஸ்க் எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுகள், ஒட்டப்பட்ட கல் திரைகள் மற்றும் அதில் பணியாற்றிய துருக்கிய கைவினைஞர்களின் குறிப்பிடத்தக்க கைவினைத்திறனைக் காட்டுகிறது. இஸ்லாமிய கட்டிடக்கலை கொள்கைகளை அதன் கட்டுமானத்திலும் அலங்காரத்திலும் பயன்படுத்திய முதல் கட்டிடம் இதுவாகும்.[1]
அடிமை வம்சம் உண்மையான இஸ்லாமிய கட்டிடக்கலை பாணிகளைப் பயன்படுத்தவில்லை. தவறானகுவிமாடங்களையும் தவறான வளைவுகளையும் பயன்படுத்தியது. இது இந்தியாவில் முதல் உண்மையான வளைவுகள் மற்றும் உண்மையான குவிமாடங்களின் ஆரம்ப எடுத்துக்காட்டு அலாய் தர்வாஸாவை உருவாக்குகியது.[8] இது தில்லி சுல்தானகத்தின் காலத்தில் கட்டப்பட்ட மிக முக்கியமான கட்டிடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தாமரை மொட்டுகள் என அடையாளம் காணப்பட்ட அதன் கூர்மையான வளைவுகள் மற்றும் விளிம்புகளின் முனையுடன், இது குவாவத்-உல்-இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவாயிலாக செயல்பட்டது.
குதுப் மினார் ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாம் மினாரால் ஈர்க்கப்பட்டுள்ளது. இது ஆரம்பகால ஆப்கானிய கட்டிடக்கலைக்கு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். இது பின்னர் இந்தோ-இஸ்லாமிய கட்டிடக்கலையாக உருவானது. குதுப் மினார் 72.5 மீட்டர் (239 அடி) உயரத்தில் ஐந்து தனித்தனி மாடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அலங்கரிக்கப்பட்ட பெட்டகத்தை சுமந்து செல்லும் ஒரு முன்பகுதியால் குறிக்கப்பட்டுள்ளது . அடிவாரத்தில் 14.3 மீட்டர் விட்டம் முதல் மேலே 2.7 மீட்டர் வரை 379 படிகள் உயரம் கொண்டுள்ளது. சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுடன் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பட்டியலிடப்பட்டுள்ளது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.