கியோர்டானோ புரூணோ
From Wikipedia, the free encyclopedia
இயோர்தானோ புரூணோ (Giordano Bruno; /dʒɔːrˈdɑːnoʊ ˈbruːnoʊ/; Italian: [dʒorˈdaːno ˈbruːno]; இலத்தீன்: Iordanus Brunus Nolanus; இயற்பெயர்: பிலிப்போ புரூணோ (Filippo Bruno, சனவரி அல்லது பெப்ரவரி 1548 – 17 பெப்ரவரி 1600) என்பவர் இத்தாலிய தொமினிக்கத் துறவியும், மெய்யியலாளரும், கணிதவியலாளரும், கவிஞரும், அண்டவியலாளரும், மறைவியலாளரும் ஆவார்.[3] அவர் அண்டவியல் கோட்பாடுகளுக்கு பெயர் பெற்றவர், இது அப்போதைய புதினமான கோப்பர்னிக்கன் மாதிரியை கருத்தியல் ரீதியாக விரிவுபடுத்தியது. விண்மீன்கள் அவற்றின் சொந்தக் கோள்களால் சூழப்பட்ட தொலைதூர சூரியன்கள் என்று அவர் முன்மொழிந்தார், அத்துடன் இக்கோள்கள் சொந்தமாக உயிரினங்களை வளர்க்கும் வாய்ப்புள்ளதாகக் கூறினார். இது அண்டப் பன்மைத்துவம் எனப்படும் அண்டவியல் நிலை எனப்படுகிறது என முன்மொழிந்தார். அண்டம் எல்லையற்றது என்றும் அதற்கு "மையம்" இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இயோர்தானோ புரூணோ Giordano Bruno | |
---|---|
![]() 1578 "Livre du recteur" என்ற மரஞ்செதுக்கலில் இருந்து வரையப்பட்ட நவீனகாலஓவியம் | |
பிறப்பு | பிலிப்போ புரூணோ சனவரி/பெப்ரவரி 1548 நோலா, நாப்பொலி இராச்சியம் |
இறப்பு | 17 பெப்ரவரி 1600 (அகவை 51–52) உரோமை, திருத்தந்தை நாடுகள் |
இறப்பிற்கான காரணம் | எரிக்கப்பட்டு மரணதண்டனை |
காலம் | மறுமலர்ச்சி (ஐரோப்பா) |
பள்ளி | மறுமலர்ச்சி மனிதநேயம் நியோபைதகோரியனியம் |
முக்கிய ஆர்வங்கள் | அண்டவியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | அண்டப் பன்மைத்துவம் |
செல்வாக்குச் செலுத்தியோர் | |
செல்வாக்குக்கு உட்பட்டோர் | |
1593 ஆம் ஆண்டு முதலாக, நித்திய சாபம், திரித்துவம், கிறித்துவின் தெய்வீகம், மரியாளின் கன்னித்தன்மை மற்றும் உட்கருப்பொருள் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய கத்தோலிக்கக் கோட்பாடுகளை மறுத்த குற்றச்சாட்டின் பேரில் புருணோ உரோமையில் மதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார். புரூணோவின் அனைத்து இறைக் கொள்கையையோ, அல்லது ஆன்மாவின் மாற்றம் (மறுபிறப்பு) பற்றிய அவரது போதனையயோ தேவாலயம் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.[4] விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு, 1600 பெப்ரவரி 17 இல் உரோமின் காம்போ டி ஃபியோரியில் எரிக்கப்பட்டார்.
அவர் இறந்த பிறகு, அவர் கணிசமான புகழைப் பெற்றார், குறிப்பாக 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் அறிவியலுக்கான தியாகியாகக் கொண்டாடப்பட்டார். இருப்பினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அவர் மீதான விசாரணை அவரது மதவெறிக்கானதே அன்றி, அவரது அண்டவியல் பார்வைகளுக்காக அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்கள்.[5][6][7][8][9] இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள்[10] புரூணோவின் இறப்பிற்கு முக்கிய காரணம் அவரது அண்டவியல் பார்வைகள் என்று வாதிடுகின்றனர். இவரது வரலாறு இன்னும் கட்டற்ற சிந்தனை, மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.[11][12]
அண்டவியல் தவிர, புரூணோ நினைவாற்றல் நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை விளக்கும் "நினைவாற்றல் கலை" பற்றி விரிவாக எழுதினார். புரூனோ இசுலாமிய சோதிடம் (குறிப்பாக அவெரோசின் மெய்யியல்),[13] நியோபிளாட்டோனிசம், மறுமலர்ச்சி எர்மெடிசிசம், எகிப்திய கடவுளான தோத்தை சுற்றியுள்ள ஆதியாகமம் போன்ற புனைவுகளால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாற்றாசிரியர் பிரான்சிஸ் யேட்சு வாதிடுகிறார்.[14] புரூணோவின் பிற ஆய்வுகள் கணிதத்திற்கான அவரது தரமான அணுகுமுறை, மொழிக்கான வடிவவியலின் இடஞ்சார்ந்த கருத்துகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன.[15]