கரண் சிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கரண் சிங் (Karan Singh) (பிறப்பு:9 மார்ச் 1931), ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங்கின் மகன் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகவும்,[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர். மேலும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இந்திய அரசின் சுற்றுலா, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராகவும் பணியாற்றியவர். மேலும் அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவராகவும் பணியாற்றியவர்.[2]பனாரசு இந்து பல்கலைக்கழகம் மற்றும் கஷ்மீர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். காஷ்மீர் பிரச்சினைகளில் இந்திய அரசுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்குபவர்.[3]
கரண் சிங் | |
---|---|
کرن سنگھ | |
கரண் சிங் | |
இந்திய மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் சனவரி 2012 – சனவரி 2018 | |
பதவியில் சனவரி 2006 – சனவரி 2012 | |
பதவியில் சனவரி 2000 – சனவரி 2006 | |
பதவியில் நவம்பர் 1996 – ஆகஸ்டு 1999 | |
இந்திய மக்களவை உறுப்பினர் உதம்பூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1967 - 1970 1971 - 1977 1977 - 1980 1980 - 1984 | |
பின்னவர் | கிரிதாரி லால் டோக்ரா |
சுற்றுலா & விமானப் போக்குவரத்து அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1967 - 1973 | |
சுகாதாரம் & குடும்ப நல அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1973 - 1977 | |
கல்வி & பண்பாட்டுத் துறை அமைச்சர், இந்திய அரசு | |
பதவியில் 1979 - 1980 | |
அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதுவர் | |
பதவியில் 1989 - 1990 | |
முன்னையவர் | பி. கே. கௌல் |
பின்னவர் | ஆபித் உசைன் |
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஆளுநர் | |
பதவியில் 17 நவம்பர் 1952 – 30 மார்ச் 1965 | |
முன்னையவர் | ஹரி சிங் |
பின்னவர் | பதவி ஒழிக்கப்பட்டது |
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஆளுநர் | |
பதவியில் 30 மார்ச் 1965 – 15 மே 1967 | |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | பகவான் சகாய் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 மார்ச்சு 1931 (1931-03-09) (அகவை 93) கேனிஸ், பிரான்சு |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு கட்சி |
துணைவர் | யசோ இராச்சிய இலக்குமி |
வாழிடம் | புதுதில்லி |
கையெழுத்து | |
2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ஆகியவைகள் நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் சமூகப் பொருளாதாரம் மற்றும் கல்வியில் முன்னேறும் என கரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.[4]