ஆந்திர மாநிலம்
இந்திய முன்னாள் மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
ஆந்திரா மாநிலம் (Andhra State ) என்பது இந்தியாவின் முன்னாள் மாநிலம் ஆகும். இது 1953 இல் மதராஸ் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் வட மாவட்டங்களைப் பிரித்து புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு மாநிலமாகும்.[1] இந்த மாநிலமானது இராயலசீமை மற்றும் கடற்கரை ஆந்திரா ஆகிய இரு வேறுபட்ட பண்பாட்டுப் பகுதிகளால் ஆனது. ஐதராபாத் இராச்சியத்தில் இருந்த சில பகுதிகளைத் தவிர்த்து ஆந்திரா மாநிலம் தெலுங்கு பேசும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, ஆந்திரா மாநிலத்துடன் ஐதராபாத் இராச்சியத்தின் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைக்கப்பட்டு ஆந்திரப் பிரதேசம் உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள்
Warning: Value not specified for "common_name" | |||||
ஆந்திர மாநிலம் ஆந்திராஷ்டிரம் ఆంధ్రరాష్ట్రము | |||||
இந்திய முன்னாள் மாநிலம் | |||||
| |||||
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் அமைவிடம் | |||||
தலைநகரம் | கர்னூல் | ||||
அரசு | மாநிலம் | ||||
முதலமைச்சசர் | |||||
• | 1953-1954 | த. பிரகாசம்(முதல்) | |||
• | 1955-1956 | பேஜவாடா கோபால் ரெட்டி(கடைசி) | |||
ஆளுநர் | |||||
• | 1953-1956 | சந்துலால் மாதவ்லால் திரிவேதி (முதல் மற்றும் கடைசி) | |||
வரலாறு | |||||
• | ஆந்திர மாநில சட்டம், 1953 (சென்னை மாநிலத்தில் இருந்து பிரிக்கபட்டது) |
1 அக்டோபர் 1953 | |||
• | மாநில மறுசீரமைப்புச் சட்டம் (ஐதராபாத் மாநிலத்தின் தெலுங்கு பேசும் பகுதிகள் ஒன்றிணைக்கபட்டன ) |
1 நவம்பர் 1956 | |||
மூடு