தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் ஒன்பதாவது எழுத்து. From Wikipedia, the free encyclopedia

ஐ

() தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இஃது ஒன்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஐகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஐயன்னா" என்பது வழக்கம்.

ஐ என்னும் தமிழ் எழுத்தின் சைகை காணொளி
விரைவான உண்மைகள் ஐ, தமிழ் எழுத்துக்கள் ...
Thumb
தமிழ் எழுத்துக்கள்
க்ங்ச்ஞ்ட்
ண்த்ந்ப்ம்
ய்ர்ல்வ்ழ்
ள்ற்ன்
மூடு

"ஐ" யின் வகைப்பாடு

தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]

இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், என்பது க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].

சொல்லில் ஐகாரம் வரும் இடங்கள்

Thumb
'ஐ' எழுதும் முறை

தனி சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டை, ரை, லை போன்ற எழுத்துகளும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டைனோசோர், ரைன், லைலா என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஐகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஐகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

"ஐ" யும் மெய்யெழுத்துகளும்

யுடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து ஐகார உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துகளாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன.[4]. இதனால், ஐகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஐகாரத்தைக் குறிக்கும் சங்கிலிக் கொம்பு குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துகளோடும் ஐகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.

மேலதிகத் தகவல்கள் மெய்யெழுத்துகள், சேர்க்கை ...
மெய்யெழுத்துகள்சேர்க்கைஉயிர்மெய்கள்
வரிவடிவம்பெயர்வரிவடிவம்பெயர்
க்இக்கன்னாக் + ஐகைகையன்னா
ங்இங்ஙன்னாங் + ஐஙைஙையன்னா
ச்இச்சன்னாச் + ஐசைசையன்னா
ஞ்இஞ்ஞன்னாஞ் + ஐஞைஞையன்னா
ட்இட்டன்னாட் + ஐடைடையன்னா
ண்இண்ணன்னாண் + ஐணைணையன்னா
த்இத்தன்னாத் + ஐதைதையன்னா
ந்இந்தன்னாந் + ஐநைநையன்னா
ப்இப்பன்னாப் + ஐபைபையன்னா
ம்இம்மன்னாம் + ஐமைமையன்னா
ய்இய்யன்னாய் + ஐயையையன்னா
ர்இர்ரன்னார் + ஐரைரையன்னா
ல்இல்லன்னால் + ஐலைலையன்னா
வ்இவ்வன்னாவ் + ஐவைவையன்னா
ழ்இழ்ழன்னாழ் + ஐழைழையன்னா
ள்இள்ளன்னாள் + ஐளைளையன்னா
ற்இற்றன்னாற் + ஐறைறையன்னா
ன்இன்னன்னான் + ஐனைனையன்னா
மூடு

வரிவடிவம்

தமிழில் ஐகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. மிகப் பழைய காலத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஐகாரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுகள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்குத் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.

Thumb

ஐகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஐகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஏகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.

Thumb

பிரெய்லியில் ஐகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் மூன்றாவது வரிசையில் இடப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது யைக் குறிக்கும். இதைக் கீழே உள்ள படம் காட்டுகிறது.

Thumb
பாரதி பிரெய்லியில் ஐகாரம்

குறிப்புகள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.